இடைக்கால பொதுசெயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் தங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி பல உட்கட்சி குழப்பங்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகிறார்கள்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு ஜனவரி 4ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.
இதற்கிடையில் எடப்பாடி தரப்பில் டிசம்பர் 27ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்திதொடர்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதனிடையில், கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான அதிமுக வரவு செலவு கணக்குகளை கடந்த நவம்பர் 29ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த கணக்குகளை இன்று தேர்தல் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் தாக்கல் செய்த அந்த விவரங்களை தனது இணையதள பக்கத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றியுள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!