துணிவு - வாரிசு ரிலீசுக்கு முன்பே அக்கப் போர்!

துணிவு - வாரிசு ரிலீசுக்கு முன்பே அக்கப் போர்!

  ஜனவரி 09, 2023 | 12:06 pm  |   views : 1934


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் 11ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் முழுவதும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் முன்பாக பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள வெற்றி திரையரங்கில் 2 படமும் வெளியாக உள்ளது. போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள 3 திரையரங்கில் 2 திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் படங்கள் தனித்தனியே வெளியிடப்பட உள்ள நிலையில், வெற்றி திரையரங்கில் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியிடப்பட உள்ளதால் இதில் முதல் காட்சியாக எந்த திரைப்படம் வெளியிடுவது என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.



இரு தரப்பு ரசிகர்களும் ஆன்லைனில் 11ம் தேதி காலை 5 மணி முதல் காட்சியை காண்பதற்காக துணிவு வாரிசு இரண்டு படங்களுக்குமே புக்கிங் செய்து வருகின்றனர். அஜித் மற்றும் விஜய் நடித்த 2 படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் 11ம் தேதி எந்த படம் முதலில் வெளியாகும் என்பதில் போடி நகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் தற்போது உருவாகியதால் போடி நகர் காவல் துறையினர் தலையிட்டு தியேட்டர் உரிமையாளர்களிடமும் இருதரப்பு ரசிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரே நேரத்தில் ஒரே திரையரங்கில் 2 படங்களும் வெளியிடப்பட்டால் ரசிகர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ள காரணத்தினாலும், ஒரு தியேட்டரில் இரண்டு படங்களும் வெளியிடப்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதன் அடிப்படையிலும் காவல்துறையினர் ஒரு படத்தை மட்டும் வெளியிட தியேட்டர் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.



இதன் காரணமாக எந்த படம் திரையிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் இரு தரப்பு ரசிகர்களும் பேனர் வைத்துக் கொண்டு தியேட்டரை முற்றுகையிட்டனர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பு ரசிகர்களும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதனால் போடிநாயக்கனூர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது.



Also read...  நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி

2024-04-24 07:34:24 - 18 hours ago

நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி பெங்களூரு,கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலார் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் கட்சி உங்கள் தாலியையும், தங்கத்தையும் பறிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. நாடு 70 ஆண்டுகளாக சுதந்திரமாக இருந்து வருகிறது. 55 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு உள்ளது. 'தாலி'


பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன்

2024-04-24 01:25:25 - 1 day ago

பக்குவமற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி : பினராயி விஜயன் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.


கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம்

2024-04-24 01:23:44 - 1 day ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ராமநாதபுரம் பகீர் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன்


அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

2024-04-23 10:43:35 - 1 day ago

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த


கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை

2024-04-19 15:48:51 - 5 days ago

கோவையில் ஒரு லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியலில் இல்லை : அண்ணாமலை தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்த நிலையில் கோவை மக்களவை தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என


தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு

2024-04-19 15:40:29 - 5 days ago

தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின்


மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன்

2024-04-19 13:42:24 - 5 days ago

மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் பிரதமராக வருவது தான் நாட்டுக்கு நல்லது - டி.டி.வி. தினகரன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர். இந்த நிலையில்,


கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்!

2024-04-18 07:00:35 - 6 days ago

கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்! கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை (19 ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில்,