திருமணச் சடங்கின்போது மணப்பெண் திடீர் மரணம்: தங்கையுடன் நடந்து முடிந்த திருமணம்!
பிப்ரவரி 28, 2023 | 04:40 pm | views : 1920
இன்றைய சமகால பின்னணியிலும், பெண்கள் மறுமணம் செய்தால் அதை விமர்சிக்க, அவதூறு பரப்ப பெரும்பாலானோர் உள்ளனர். ஆனால், மறுமணம் செய்யும் கணவன்கள் இத்தகைய அவதூறுகளுக்கு ஆளாகுவதில்லை. இத்தகைய கொடுப்பினை ஆண்களுக்கு மட்டுமே உண்டு. குஜராத்தில், திருமணம் நடை பெறுவதற்கு முன்பே, மணமகனுக்கு மறுமணம் செய்ய வைக்கப்பட்டிருக்கிறது. இந்த செயல் பல்வேறு விவாதங்களை சமூக ஊடகங்களில் எழுப்பியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும் போது மணமகள் இறந்துவிட, மணமகனுக்கும் இறந்தவரின் தங்கைக்கும் திருமணம் நடைபெற்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகும் செய்தியில், " குஜராத் மாநிலம் பாவ்நகரில் உள்ள பகவானேஷ்வர் மகாதேவ் திருக்கோயில் முன்பாக மணமகன் விஷால் மற்றும் மணமகள் கேதால் (Hetal) ஆகிய இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண சடங்குகள்போது, மணமகள் உடல்நலக்குறைவு காரணமாக மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டும் எந்தவித பலனும் இல்லை. மாரடைப்பு காரணமாக உயிர் இழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடந்து, அதே திருமண மேடையில் இறந்தவரின் தங்கையை திருமணம் செய்து வைக்க பெண்ணின் பெற்றோர்கள் முடிவெடுத்தனர். இறந்தவர் பிணவறையில் இருக்கும்போதே, இரண்டாம் மகளுக்கு அதே மணமகனை திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நகர் மன்ற உறுப்பினரும் மாலதாரி சமாஜி என்ற அமைப்பின் தலைவருமான லக்ஷமன்பாய் ரத்தோர் கூறுகையில், " இது மிகவும் துயரமான நிகழ்வு. மணமகன் வீட்டாரை வெறுங்கையுடன் அனுப்ப வேண்டாம் என்ற முடிவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
Also read... வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!
2021ல் இதே போன்ற சம்பவம்:
உத்திரப் பிரதேசத்தில் 2021ல் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருப்பதாகவும், இறந்த மகளை பக்கத்து அறையில் வைத்து விட்டு திருமணம் நடந்திருப்பதாகவும் ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர் .
இது பற்றி கூகுளில் தேடிக் கொண்டிருந்த போது உத்திரப் பிரதேசத்தில் 2021ல் இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இறந்த மகளை பக்கத்து அறையில் வைத்து விட்டு திருமணம் நடந்திருக்கிறது.
என்னவொரு கொடுமை. மணப்பெண்களின் நிலை மனதை பிசைகிறது :(https://t.co/nbceSMdpmC
— Kavitha Muralidharan (@kavithamurali) February 28, 2023
இருப்பினும், இந்த நிகழ்வை கண்டிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்ணியவாதிகளும் ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது மகளின் விருப்பத்துடன் இந்த திருமணம் நடைபெற்றதா? என்று கேள்வி எழுப்பும் அவர்கள், ஒரு நியாயமான திருமண வாழ்ககைக்கு ஆணும், பெண்ணும் முக்கியமானவர்கள். ஆனால், பெரும்பாலான திருமணங்களில் பெண்களின் விருப்பத்தைக் கேட்காமல் பெற்றோர், சுற்றத்தினரின் வற்புறுத்தல்களை மட்டுமே முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.
கோவையில் பாஜக பணப்பட்டுவாடா... ரூ 81,000 மற்றும் பூத் சிலிப் பறிமுதல்!
கோவையில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த ரூபாய் 81 ஆயிரம் மற்றும் வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக நாளை (19 ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில்,
தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி
தமிழ் புத்தாண்டு வாழ்த்து ஏன் அச்சிடவில்லை? ஆவின் நிர்வாகம் விளக்கம்
ஆவின் பால் பாக்கெட்டுகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி அச்சிட்டு வெளியிடப்படவில்லை என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆவின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான பண்டிகைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பால் பாக்கெட்டுகளில்
வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கு? ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் 17-ந் தேதியுடன் முடிவடைகிறது. பிரசாரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட
அமைச்சர் அன்பில் மகேஷ் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவை அதற்கான சோதனைகளை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்
சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக போலீசார்
தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல்
தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
3 ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் - கன்னியாகுமரியில் அமித்ஷா பேச்சு
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து கன்னியாகுமரியில்