INDIAN 7

Tamil News & polling

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தாமிரபரணி-வெள்ளநீர் கால்வாய் ஆலோசனை கூட்டம்

By E7 Tamil 13 ஜூலை 2021 05:24 AM
Nature

திசையன்விளை யில் தாமிரபரணி-வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக தாமிரபரணி ஆறு கருமேனியாறு நம்பியாறு வெள்ள நீர் கால்வாய் இணைப்பு திட்டம் 2009 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. விறுவிறுவென நடைபெறும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் குறித்த நிறை குறைகளை விவசாயிகளிடம் கேட்கும் பொருட்டு திசையன்விளை செல்வமருதூர் பயணியர் விடுதியில் கருத்துக் கேட்புக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில்திறந்த வெளியில் நடைபெற்றது.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு தாமிரபரணி_ கருமேனியாறு_ நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டமானது அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆறு கட்டங்களாக நடைபெறும் வெள்ள நீர் கால்வாய் திட்டப் பணிகள் 80% சதவிகிதம் முடிக்கப்பட்டு இன்னும் 20 சதவீத பணிகளை முடியும் தருவாயில் உள்ளது.

பொன்னாக்குடி அருகே நாற்கர சாலை ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் வெள்ள நீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார் .

மேலும் இத் திட்ட பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கான 214 கோடி ரூபாய் நிதி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஒதுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், மீதி தொகை194 கோடி ரூபாய் உரியவர்களுக்கு திட்டப்பணிகள் முடிப்பதற்குள் முதலமைச்சர் வழங்குவார் என்றும் தெரிவித்தார். கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட திசையன்விளை தாலுகா விவசாயிகளின் காரசாரமான சரமாரி கேள்விகளுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்ட அதிகாரிகள் தகுந்த பதில்களையும் விளக்கங்களையும் அளித்தனர். கூட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்ட துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள், வெள்ளநீர் கால்வாய் திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் திசையன்விளை தாசில்தார் செல்வகுமார்,காங்கிரஸ் மூத்த தலைவர் சேம்பர் கே.செல்வராஜ், விவேக் முருகன், லயன் டி.சுயம்புராஜன், தங்கையா கணேசன்,தி.மு.க ஒன்றிய செயலாளர் கள் ஜோசப் பெல்சி, வி.எஸ் ஆர் . ஜெகதீஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு


கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்


நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு


ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு


விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்