INDIAN 7

Tamil News & polling

சபாநாயகர் அப்பாவு தலைமையில் தாமிரபரணி-வெள்ளநீர் கால்வாய் ஆலோசனை கூட்டம்

By E7 Tamil 13 ஜூலை 2021 05:24 AM
Nature

திசையன்விளை யில் தாமிரபரணி-வெள்ளநீர் கால்வாய் திட்ட பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் விதமாக தாமிரபரணி ஆறு கருமேனியாறு நம்பியாறு வெள்ள நீர் கால்வாய் இணைப்பு திட்டம் 2009 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. விறுவிறுவென நடைபெறும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் குறித்த நிறை குறைகளை விவசாயிகளிடம் கேட்கும் பொருட்டு திசையன்விளை செல்வமருதூர் பயணியர் விடுதியில் கருத்துக் கேட்புக் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில்திறந்த வெளியில் நடைபெற்றது.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு தாமிரபரணி_ கருமேனியாறு_ நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டமானது அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆறு கட்டங்களாக நடைபெறும் வெள்ள நீர் கால்வாய் திட்டப் பணிகள் 80% சதவிகிதம் முடிக்கப்பட்டு இன்னும் 20 சதவீத பணிகளை முடியும் தருவாயில் உள்ளது.

பொன்னாக்குடி அருகே நாற்கர சாலை ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே பாலம் கட்டும் பணி ஆகியவற்றிற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் வெள்ள நீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார் .

மேலும் இத் திட்ட பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கான 214 கோடி ரூபாய் நிதி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஒதுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் நில உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், மீதி தொகை194 கோடி ரூபாய் உரியவர்களுக்கு திட்டப்பணிகள் முடிப்பதற்குள் முதலமைச்சர் வழங்குவார் என்றும் தெரிவித்தார். கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட திசையன்விளை தாலுகா விவசாயிகளின் காரசாரமான சரமாரி கேள்விகளுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்ட அதிகாரிகள் தகுந்த பதில்களையும் விளக்கங்களையும் அளித்தனர். கூட்டத்தில் நதிநீர் இணைப்பு திட்ட துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள், வெள்ளநீர் கால்வாய் திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகர் திசையன்விளை தாசில்தார் செல்வகுமார்,காங்கிரஸ் மூத்த தலைவர் சேம்பர் கே.செல்வராஜ், விவேக் முருகன், லயன் டி.சுயம்புராஜன், தங்கையா கணேசன்,தி.மு.க ஒன்றிய செயலாளர் கள் ஜோசப் பெல்சி, வி.எஸ் ஆர் . ஜெகதீஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: என்ன காரணம்..? வெளியான பரபரப்பு தகவல்கள்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை: என்ன காரணம்..? வெளியான பரபரப்பு


டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான் போட்டி

டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான்


56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!


நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை Chennai அதிமுக தமிழக வெற்றிக் கழகம் கனமழை அண்ணாமலை Annamalai MK Stalin திருமாவளவன் ADMK Tamil Nadu பாஜக AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு BJP இந்திய அணி முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி TTV Dhinakaran Seeman indian cricket team வானிலை ஆய்வு மையம் TVK Conference Tamilaga Vettri Kazhagam செங்கோட்டையன் AMMK தமிழ்நாடு தமிழக வெற்றிக்கழகம் Sengottaiyan PMK தீபாவளி Northeast Monsoon மு.க.ஸ்டாலின் மழை Anbumani Ramadoss காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் Rain பிரதமர் மோடி நயினார் நாகேந்திரன் VCK தென்காசி பாமக தவெக விஜய் Thoothukudi Tirunelveli விசிக உதயநிதி ஸ்டாலின் GetOut Stalin அமரன் நடிகை கஸ்தூரி IMD TVK Vijay திருச்செந்தூர் பாலியல் தொல்லை மதுரை Edappadi Palaniswami டிடிவி தினகரன் வானிலை Congress தமிழகம் விடுமுறை தூத்துக்குடி Heavy Rain திமுக அரசு இந்தியா சட்டசபை தேர்தல் M.K. Stalin Ajith கோலிவுட் திருநெல்வேலி Ind vs Nz தனுஷ் GetOut Modi rain Washington Sundar வாஷிங்டன் சுந்தர் Nainar Nagendran கைது