பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான புகழேந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.நீதிபதி சச்சின் தத்தா அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது.தேர்தல் ஆணையத்திலும் பல்வேறு புகார்கள் வழங்கப்பட்டுள்ளன என்று புகழேந்தி தரப்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி தற்போது என்ன நிவாரணம் வேண்டும் என தெரிவியுங்கள் என்றார். தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ளதால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க. கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும், தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி கையெழுத்திட அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தனித்தனி புகார்களை தேர்தல் ஆணையத்தில் வழங்கி உள்ளோம். ஆனால் அதன் மீது தேர்தல் ஆணையம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே அந்த மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தற்போது பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று புகழேந்தி தரப்பில் கோரப்பட்டது.இதையடுத்து தற்போது அ.தி.மு.க கட்சி இரண்டு அணிகளாக உள்ளதா?அதனால் தான் இரு தரப்பும் அ.தி.மு.க.வை உரிமை கோருகிறீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞரான பாலாஜி சீனிவாசன் வாதிடும் போது கூறியதாவது:-அ.தி.மு.க என்பது ஒரே அணிதான், எந்த அணிகளும் அ.தி.மு.க.வுக்கு இல்லை.இதை பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. குறிப்பாக என்.சி.பி. கட்சி வழக்கை எடுத்துக்காட்டாக எடுத்து கொள்ளலாம், ஏனெனில் யாருக்கு 'மெஜாரிட்டி' உள்ளதோ அவர்களுக்கே கட்சியும், சின்னமும். அதன் அடிப்படையில்தான் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும்.
அந்த வகையில் அ.தி.மு.க. கட்சிக்கோ, சின்னத்துக்கோ எந்த பிரச்சனையும் இல்லை.இந்த நபருக்கு ஏதேனும் கோரிக்கை உள்ளதென்றால் அதனை தேர்தல் ஆணையத்திடம் முறையிடலாம். அதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.மேலும் புகழேந்தி ஒரு அடிப்படை உறுப்பினர் கிடையாது. அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். எனவே அவருக்கு எந்த உரிமையும் இல்லை.அ.தி.மு.க.வின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்துள்ளது. அதேபோல அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பக்கம் உள்ளனர்.எனவே பெரும்பான்மை அடிப்படையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. எனவே இந்த விவகாரத்தில் புகழேந்தி வருவதற்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதி இந்த மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!