நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது; பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம...

நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது; பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம...

  மார்ச் 30, 2024 | 04:38 pm  |   views : 79


தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.



இதனிடையே, மதுரை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார்.இந்நிலையில், மதுரையில் ராம சீனிவாசன் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தனியார் செய்தி நிறுவனத்திற்கு ராம சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க. சர்வ வல்லமை வாய்ந்த கட்சி என்று பேசுவீர்களே. ஏதோ ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட எக்கு கோட்டை என்று பேசுவீர்களே, என்றைக்கு அ.தி.மு.க. ஒன்றரை கோடி ஓட்டு வாங்கியது. ஜெயலலிதா இல்லாதபோது அ.தி.மு.க. எப்போது ஒன்றரை கோடி ஓட்டு வாங்கியது.



கூட்டணியே வேண்டாம் என்று ஜெயலலிதா தனித்துபோட்டியிட்டாரே, உங்களால் (எடப்பாடி பழனிசாமி) தனித்து போட்டியிடமுடியுமா? 2014 தேர்தலிலேயே நாடும் நமதே நாற்பதும் நமதே என்று ஜெயலலிதா கூறினாரே நீங்கள் கூட்டணி இல்லாமல் எப்போதாவது தேர்தலில் போட்டியிட்டுள்ளீர்களா?ஜெயலலிதாவுக்கு இருந்த அரசியல் ஆண்மை உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) ஏதோ வாள் எடுத்து வீசிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த தேர்தலுக்குபின் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. இருக்காது.



ஏனென்றால் அ.தி.மு.க. செல்வாக்கை இழக்க தொடங்கிவிடும். இந்த தேர்தலில் பல தொகுதிகளில் முடிந்தால் எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. 3வது இடத்திற்குத்தான் செல்லும். விதிவிலக்காக ஒருசில இடங்களில் அ.தி.மு.க. 2வது இடம் செல்லலாம் அல்லது ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றிபெறலாம். ஆனால், அ.தி.மு.க. பெரும் சரிவை சந்திக்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தபோது அ.தி.மு.க. எவ்வளவு பின்னடைவை சந்தித்தபோதும் அவர்களால் அக்கட்சியை மீட்டுக்கொண்டுவர முடியும்.



Also read...  சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்


எடப்பாடி பழனிசாமி ஒன்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கிடையாது. அவர் ஒன்றும் ஆளுமை உள்ள தலைவர் கிடையாது. அ.தி.மு.க.வினர் எவரும் எடப்பாடி பழனிசாமியை நம்பவில்லை. அ.தி.மு.க. சரிவை சந்தித்தப்பின் அக்கட்சியில் யாரும் இருக்கமாட்டார்கள். தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வில் மிகப்பெரிய மாற்றம் வரும். தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க. பெரும் பின்னடைவை சந்திக்கும். அ.தி.மு.க. இருந்தாலும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பாரா? என்பது சந்தேகம்தான். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது மோடியா? லேடியா? என்று கேட்டாரே அப்படி கேட்கும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா? இவ்வாறு அவர் கூறினார்.


எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

2024-05-03 11:52:16 - 1 day ago

சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. கேவியட் மனு தாக்கல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதன்பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அப்பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா,


கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு

2024-05-03 11:45:56 - 1 day ago

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம்

2024-05-03 05:15:11 - 1 day ago

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி மரணம் - வளைகாப்புக்காக சென்றபோது நேர்ந்த பரிதாபம் சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் உளுந்தூர்பேட்டைக்கும், விருத்தாசலத்துக்கும் இடையே வந்தபோது, 7 மாத கர்ப்பிணி பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், உடனடியாக பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நடுவழியில் நிறுத்தினர். பின்னர்


வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது

2024-05-02 10:37:23 - 2 days ago

வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : சட்டம் அமலுக்கு வந்தது கடந்த சில ஆண்டுகளாக பலரும் தங்கள் வாகனங்களில் பிரஸ், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட்டு, தலைமை செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டி பயணிக்கிறார்கள். இப்படி பயணிப்பவர்களை பிடித்து ஆய்வு செய்தால் அதில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது. மேலும் குற்றச்செயல்களை செய்துவிட்டு தப்பிக்க சில ரவுடிகள் மனித உரிமை, பிரஸ், ஊடகம்,


நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2024-05-02 06:38:29 - 2 days ago

நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு புதுடெல்லி,இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2024-25 கல்வி ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கியது. www.nta.ac.in, exams.nta.ac.in/NEET என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என


முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர்

2024-04-29 07:05:28 - 5 days ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பா.ஜ.க. பிரமுகர் தமிழகத்தில் ஒரே கட்ட மாக கடந்த 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதையொட்டி தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டான் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து அவர் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கொடைக்கானல் புறப்பட்டார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த


நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு

2024-04-29 06:58:55 - 5 days ago

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது: திருமாவளவன் அறிவிப்பு சென்னை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு


நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

2024-04-25 06:32:52 - 1 week ago

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்