மாமனாரை லாரி ஏற்றிக் கொலை செய்த மருமகன்..!

By Admin | Published in செய்திகள் at ஏப்ரல் 05, 2024 வெள்ளி || views : 600

மாமனாரை லாரி ஏற்றிக் கொலை செய்த மருமகன்..!

மாமனாரை லாரி ஏற்றிக் கொலை செய்த மருமகன்..!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விநாயகாநகரைச் சேர்ந்தவர் துரை. இவர், கடந்த 1-ம் தேதி இரவு எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது குமாரகிரி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில், துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய, போலீஸார் கோவில்பட்டி சாலையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.





இதில், ஒரு லாரி அதிவேகமாக கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்தை நோக்கி சென்றது. அதே லாரி, சிறிது நேரத்தில் மீண்டும் கோவில்பட்டியை நோக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த வழக்கை விசாரிக்க எட்டயபுரம் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், உடனடியாக எட்டயபுரம் அருகே தோழ்மாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.





இதில், உயிரிழந்த துரையின் மகளை திருமணம் செய்த கோவில்பட்டி விநாயகாநகரைச் சேர்ந்த உதயகுமார் என்ற கடம்பூர் சின்ன குமாரராஜா என்பவரின் ஏற்பாட்டில் அதிவேகமாக லாரியை இயக்கி துரை சென்ற பைக் மீது மோதவிட்டு, அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உதயகுமார், அவர் நண்பர்களான லாரி உரிமையாளர் நாகராஜ், லாரி ஓட்டுநரான கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளத்தைச் சேர்ந்த சிவராம் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், சின்னகுமாரராஜாவுக்கும், அவரது மாமனார் துரைக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழில் தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது.





கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட்டில் ஒரு நிலம் விற்பது தொடர்பான விவகாரத்தில் துரை, தன் மருமகனான உதயகுமாரை அவதுறாகப் பேசியுள்ளாராம். இது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை கொலை செய்ய முடிவெடுத்த கடம்பூர் சின்னகுமாரராஜா, நாகராஜ் மற்றும் சிவராம் ஆகியோருடன் சேர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் நின்று திட்டம் தீட்டி உள்ளார். இதில், எட்டயபுரம் அருகே குமாரகிரி விலக்கை கடந்தவுடன் காட்டுப்பகுதி உள்ளது.





அப்பகுதியில் வைத்து, அவர் மீது லாரியை மோதவிட்டு, கொலை செய்துவிட்டால், அது விபத்து வழக்காக போய்விடும் என முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, கடந்த 1-ம் தேதி மாலை துரையை தொடர்பு கொண்ட சின்னகுமாரராஜா, எட்டயபுரத்தில் ஒருவர் பணம் தர வேண்டும். அதனை சென்று வாங்கி வாருங்கள் என அனுப்பினார். இதனை நம்பிய அவர் எட்டயபுரத்துக்கு சென்றார். பின்னர் அவரை இளம்புவனத்துக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் துரை இளம்புவனத்துக்கு வந்துள்ளார். இப்படி போனில் தொடர்பு கொண்டு அலைக்கழித்துள்ளார்.





அப்போது லாரி ஓட்டுநரிடம் கூறி, துரையின் பைக்கின் பதிவு எண் மற்றும், துரையின் அடையாளங்களைக் கூறி அனுப்பினார். ஓட்டுநர் சிவராம், துரையை இளம்புவனம் பகுதியில் அடையாளம் கண்டார். இதையடுத்து, துரையை ஊருக்கு புறப்பட்டு வரும்படி கூறியுள்ளார். அவர் குமாரகிரி அருகே காட்டுப்பகுதியில் வந்தபோது, பின்னால் லாரி கொண்டு மோதி துரையை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.



தூத்துக்குடி கோவில்பட்டி துரை கடம்பூர் எட்டயபுரம் குமாரராஜா
Whatsaap Channel
விடுகதை :

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?


விடுகதை :

உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?


விடுகதை :

கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்

எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்


இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்


விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை

காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை


கூலி - திரை விமர்சனம்!

கூலி - திரை விமர்சனம்!


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next