POLLING FLAMES

 

மாமனாரை லாரி ஏற்றிக் கொலை செய்த மருமகன்..!

2 years ago 05 ஏப்ரல் 2024 08:52 AM | views : 211
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி விநாயகாநகரைச் சேர்ந்தவர் துரை. இவர், கடந்த 1-ம் தேதி இரவு எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது குமாரகிரி விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில், துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிய, போலீஸார் கோவில்பட்டி சாலையில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.





இதில், ஒரு லாரி அதிவேகமாக கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரத்தை நோக்கி சென்றது. அதே லாரி, சிறிது நேரத்தில் மீண்டும் கோவில்பட்டியை நோக்கி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த வழக்கை விசாரிக்க எட்டயபுரம் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், உடனடியாக எட்டயபுரம் அருகே தோழ்மாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் நாகராஜ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.





இதில், உயிரிழந்த துரையின் மகளை திருமணம் செய்த கோவில்பட்டி விநாயகாநகரைச் சேர்ந்த உதயகுமார் என்ற கடம்பூர் சின்ன குமாரராஜா என்பவரின் ஏற்பாட்டில் அதிவேகமாக லாரியை இயக்கி துரை சென்ற பைக் மீது மோதவிட்டு, அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உதயகுமார், அவர் நண்பர்களான லாரி உரிமையாளர் நாகராஜ், லாரி ஓட்டுநரான கயத்தாறு அருகேயுள்ள பன்னீர்குளத்தைச் சேர்ந்த சிவராம் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், சின்னகுமாரராஜாவுக்கும், அவரது மாமனார் துரைக்கும் இடையே ரியல் எஸ்டேட் தொழில் தகராறு மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்துள்ளது.





கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட்டில் ஒரு நிலம் விற்பது தொடர்பான விவகாரத்தில் துரை, தன் மருமகனான உதயகுமாரை அவதுறாகப் பேசியுள்ளாராம். இது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை கொலை செய்ய முடிவெடுத்த கடம்பூர் சின்னகுமாரராஜா, நாகராஜ் மற்றும் சிவராம் ஆகியோருடன் சேர்ந்து கோவில்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் நின்று திட்டம் தீட்டி உள்ளார். இதில், எட்டயபுரம் அருகே குமாரகிரி விலக்கை கடந்தவுடன் காட்டுப்பகுதி உள்ளது.





அப்பகுதியில் வைத்து, அவர் மீது லாரியை மோதவிட்டு, கொலை செய்துவிட்டால், அது விபத்து வழக்காக போய்விடும் என முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து, கடந்த 1-ம் தேதி மாலை துரையை தொடர்பு கொண்ட சின்னகுமாரராஜா, எட்டயபுரத்தில் ஒருவர் பணம் தர வேண்டும். அதனை சென்று வாங்கி வாருங்கள் என அனுப்பினார். இதனை நம்பிய அவர் எட்டயபுரத்துக்கு சென்றார். பின்னர் அவரை இளம்புவனத்துக்கு வரும்படி கூறியுள்ளார். இதனால் துரை இளம்புவனத்துக்கு வந்துள்ளார். இப்படி போனில் தொடர்பு கொண்டு அலைக்கழித்துள்ளார்.





அப்போது லாரி ஓட்டுநரிடம் கூறி, துரையின் பைக்கின் பதிவு எண் மற்றும், துரையின் அடையாளங்களைக் கூறி அனுப்பினார். ஓட்டுநர் சிவராம், துரையை இளம்புவனம் பகுதியில் அடையாளம் கண்டார். இதையடுத்து, துரையை ஊருக்கு புறப்பட்டு வரும்படி கூறியுள்ளார். அவர் குமாரகிரி அருகே காட்டுப்பகுதியில் வந்தபோது, பின்னால் லாரி கொண்டு மோதி துரையை கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீஸார், விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் டிடிவி தினகரன் TAMIL NADU மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN PMK AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாமக கனமழை காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் இந்திய அணி கோவை PARLIAMENT ELECTION CONGRESS திருமாவளவன் EDAPPADI PALANISWAMI கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE தமிழ்நாடு சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM AJITH கைது KEERTHY SURESH OPS INDIAN CRICKET TEAM அமமுக பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL ஓபிஎஸ் TAMIL ACTRESS NELLAI கொரோனா நெல்லை THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் தேவர் SURIYA சூர்யா தூத்துக்குடி வன்னியர் CSK திருப்பரங்குன்றம் அஜித் விடுமுறை RAJINIKANTH மதுரை கள்ளக்காதல் தென்காசி தீபாவளி வடகிழக்கு பருவமழை