வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில்,அ.தி.மு.க., வில் நான்கு பேரும், தி.மு.க., வில் இருவரும், காங்கிரஸ், தே.மு.தி.க., - -ம.தி.மு.க., வில் தலா ஒருநாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
பா.ஜ., வில் நடிகை ராதிகா ஒருவரே இடம் பெற்றுள்ளார். அவர் சினிமா துறையை சார்ந்தவர். முழுநேர அரசியல்வாதிக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தி பா.ஜ.,வில் நீடிக்கிறது.
துாத்துக்குடியில் போட்டியிட விரும்பிய நாயுடு சமுதாயத்தை சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், விவேகம் ரமேஷ் ஆகியோரும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, பாண்டுரங்கனையும் வேட்பாளராக்கவில்லை என்ற அதிருப்தி நீடிக்கிறது.
இந்நிலையில், பா.ஜ.,வுக்கு ஆதரவளிக்க நாயுடு சமுதாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.
இதுகுறித்து, நாயுடு சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் எங்கள் சமூகத்திற்கு 12 சதவீத ஓட்டுகள் உள்ளன. தென்காசி, துாத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மேற்கு, வட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக நாங்கள் உள்ளோம்.
இருப்பினும், சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் எங்கள் சமுதாயத்தினருக்கு தேசிய, மாநில கட்சிகள் முன்னுரிமை தருவதில்லை.
அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா தலைமைக்கு முன், எம்.ஜி.ஆர்., தலைமையிலான ஆட்சியில் 60 எம்.எல்.ஏ.,க்கள் வரை இருந்தனர். ஜெயலலிதா காலத்தில், முக்குலத்தோர் சமுதாயத்திற்கும், கவுண்டர் சமுதாயத்திற்கும் அ.தி.மு.க., முக்கியத்துவம் கொடுத்தது.
தி.மு.க.,வும், அதே பார்முலாவை பின்பற்றியது. இதனால், நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள் தலைவராக இருக்கும், ம.தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தோம். இனி அந்த கட்சிகளை ஆதரித்தும் பயனில்லை.
எனவே, இந்த தேர்தலில் பா.ஜ., வுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளோம். அதேநேரம், மற்ற கட்சிகளில் போட்டியிடும் எங்கள் நாயுடு சமுதாய வேட்பாளர்களுக்கு ஓட்டு போட முடிவெடுத்து உள்ளோம்.
இதற்கு நாயுடு சங்கம், பேரவை, நாயுடு மகாஜன சங்கம் என, 14க்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- டிச.24-ந்தேதி குற்றம் செய்தபிறகு அடுத்த நாள் ஞானசேகரன் என்ன செய்கிறான்? CDR-ஐ பொறுத்தவரைக்கும் பழக்க வழக்கம் எப்படி இருக்கு? அந்த பகுதி 170-வது வட்ட செயலாளர்
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!