நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. எனினும், எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் காணப்படுகிறது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.
இதில், பா.ஜ.க. சார்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டில் மாற்றம் ஏற்படுத்த மக்கள் வாக்களித்தனர். 10 ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்த தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி 140 கோடி மக்களுக்கான வெற்றி. 3-வது முறையாக மக்களின் ஆசி கிடைத்துள்ளது. பா.ஜ.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்காக நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.அவர் தொடர்ந்து பேசும்போது, தாயை இழந்த பின்னர் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ஆனால், நாட்டின் கோடிக்கணக்கான தாய்மார்கள் தங்களின் அன்பை என் மீது பொழிந்துள்ளனர் என்று பேசியுள்ளார்.
தேர்தல் சிறப்பாக நடக்க உதவியதற்காக அனைவருக்கும் நன்றி. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் பேசியுள்ளார். கோடிக்கணக்கான ஏழைகளுக்கு 5 கிலோ இலவச தானியம் கிடைத்துள்ளது என்றும் பேசியுள்ளார்.
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!