ஐசிசி 2024 உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகள் கிரிக்கெட் மோதுகின்றன. அந்த 2 அணிகளுமே இதுவரை தோல்வியை சந்திக்காததால் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
குறிப்பாக கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முன்னதாக நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 35 வயதை தாண்டி விட்டனர். அதனால் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவது இதுவே கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையிலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்ததாக செயல்கள் வெளிவந்தன. இந்நிலையில் 2023 உலகக்கோப்பையை இந்தியா வென்றிருந்தால் 2024 டி20 உலகக் கோப்பையில் விராட் அல்லது ரோஹித் ஆகியோரில் ஒருவர் விளையாடியிருக்க மாட்டார் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
அதே போல இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் 2026 டி20 உலகக் கோப்பையில் ஒன்றாக விளையாடுவதை பார்ப்பது கடினம் என்றும் சேவாக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எந்த ஒரு சீனியர் வீரருக்கும் இதுவே நம்முடைய கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்பது மனதில் இருக்கும்”
“எனவே இதை நான் உச்சமாக முடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். ஒருவேளை கடந்த வருடம் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா வென்றிருந்தால் அந்த இருவரில் ஒருவர் இந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருக்க மாட்டார். ஆனால் அவர்கள் வெல்லவில்லை. எனவே இந்திய அணிக்காகவும் ரசிகர்களுக்காகவும் இந்த கோப்பையை வெல்வதற்கான பசி அவர்களிடம் இருக்கிறது”
“இம்முறை இந்தியா வென்றால் இதுவே அவர்களுடைய கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கலாம். இருவரும் இன்னுமொரு ஐசிசி வெள்ளைப் பந்து தொடரில் விளையாட மாட்டோம் என்று சொல்லக்கூடும். அதே சமயம் ஃபிட்டாக நன்றாக செயல்பட்டால் ஏன் விளையாடக்கூடாது? இன்னும் ஒரு வருடம் கூட அவர்கள் விளையாடலாம்” என்று கூறினார்.
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து
நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!
மனித நேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!