INDIAN 7

Tamil News & polling

பாரிஸ் ஒலிம்பிக் - வினேஷ் போகத் மனு தள்ளுபடி!

14 ஆகஸ்ட் 2024 04:38 PM | views : 67
Nature

ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா இன்று (ஆக. 14) அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.

ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதிப்போட்டி வரை சென்றதால் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது .

வினேஷ் போகத் தரப்பில் சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 3வது முறையாக நேற்று (ஆக. 13) ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற கியூபாவைச் சேர்ந்த யுஸ்னெயிலிஸ் குஸ்மன் லோப்ஸ் (அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோற்றவர்) உடன் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என ஆகஸ்ட் 7ஆம் தேதி வினேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, 100 கிராம் எடை என்ற மிகச்சிறிய எடை வேறுபாடு, ஒலிம்பிக்கின் தெளிவற்ற விதிகள் மற்றும் அவற்றின் விளக்கம் பற்றி கேள்விகளை எழுப்புகிறது .

இரு நாள்களின் இரண்டாவது நாளில் குறைந்த அளவிலான எடை மிகுதிக்காக ஒரு வீராங்கனையை முழுவதுமாக தகுதிநீக்கம் செய்வது ஆழமான ஆய்வுக்குட்படுத்த வேண்டியது என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்புகிறது. வினேஷ் போகத் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்