மணிரத்னத்தை குத்திக் காட்டி பேசினாரா பா. இரஞ்சித்?

By Admin | Published in செய்திகள் at ஆகஸ்ட் 20, 2024 செவ்வாய் || views : 212

மணிரத்னத்தை குத்திக் காட்டி பேசினாரா பா. இரஞ்சித்?

மணிரத்னத்தை குத்திக் காட்டி பேசினாரா பா. இரஞ்சித்?

வாழை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ படம் ஆகஸ்ட் 23 அன்று வெளியாக உள்ளது.இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. முன்னதாக டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பா.இரஞ்சித், மிஷ்கின், வெற்றிமாறன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய இரஞ்சித், “மாரி செல்வராஜ் அனைத்து இயக்குநர்களுக்கும் படத்தைக் காட்டி அது குறித்து பேச வைக்கிறார். என்னுடைய படத்தைப் பாருங்கள் என்று சொல்லவே எனக்கு கூச்சமாக இருக்கும். ஒரு சில இயக்குநர்கள் என் படத்தைப் பார்த்துவிட்டு தங்களின் கருத்தை சொல்லமாட்டார்களா? என்று எதிர்பார்த்திருக்கிறேன்.

ஒரு பிரபல இயக்குநர், எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் என் படத்தைப் பார்த்தும், அதை என்னிடம் சொல்லவில்லை. அவர் என் படத்தைப் பார்த்ததாக அவருடன் சேர்ந்து பார்த்த ஒரு சிலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால், அந்த இயக்குநரே தற்போது மாரி செல்வராஜ் படம் குறித்து பேசுகிறார். இதை நான் கேலி கிண்டலுக்காக சொல்லவில்லை” என்றார்.

இதைத் தொடர்ந்து இரஞ்சித் எந்த இயக்குநரை குறிப்பிட்டு இவ்வாறு பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே வாழை டிரைலர் வெளியீட்டு விழாவில் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்த மணிரத்னம், “மாரி செல்வராஜ் தமிழ் திரையுலகின் வலிமையான குரலாக இருக்கிறார். அவரை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.

இப்படத்தில் எப்படி இவ்வளவு நடிகர்களைச் சிறப்பாக நடிக்க வைத்தார் என்பது தெரியவில்லை. எனக்கு பொறாமையாக இருக்கிறது. அவரிடம் தனி திறமை உள்ளது” என்றார்.இந்நிலையில், பா. இரஞ்சித் மணிரத்னத்தை குறிப்பிட்டு தான் அந்த கருத்தை தெரிவித்தாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

RANJITH MANIRATNAM VAAZHAI
Whatsaap Channel
விடுகதை :

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


விடுகதை :

முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?


விடுகதை :

அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?


வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next