INDIAN 7

Tamil News & polling

தங்கம் வென்றது இந்தியா: பாராலிம்பிக் பேட்மிண்டனில் வரலாறு படைத்தார் நிதேஷ் குமார்!

02 செப்டம்பர் 2024 02:00 PM | views : 69
Nature

பாரிஸ்: பாராலிம்பிக் தொடரின் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

பாரிஸில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டார். இப்போட்டியில் 21-14 18-21 23-21 என்ற புள்ளிக் கணக்கில் பெத்தேலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார் நிதேஷ் குமார்.






பாராலிம்பிக்கில் தற்போதுவரை இந்தியா 2 தங்கம் உள்பட 9 பதக்கங்களை வென்றுள்ளது. முன்னதாக, பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.


Like
3
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்