தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியில் சென்னையை சேர்ந்த ஐ.டி. என்ஜினீயர் ஹரிஹரன்-தேன்மொழி ஆகியோருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மூலம் கிடைத்த திருமண மொய் பணத்தை ஏதாவது ஒரு வகையில் ஏழை மக்களின் உதவிக்காக பயன்படுத்த வேண்டும் என்று இந்த புதுமண தம்பதியினர் திட்டமிட்டனர்.
இந்த நிலையில் மணமகன் ஹரிஹரனின் தந்தை மீனாட்சிசுந்தரம், தனது செல்போனில் சமூக வலைதள பதிவவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளை புற்றுநோயாளிகளை பராமரிப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தனியாக ஒரு மையம் ஏற்படுத்தி வருவதாகவும், அதற்கு தாராள மனம் கொண்ட நன்கொடையாளர்கள் உதவி செய்யும்படியும் அந்த வீடியோவில் அந்த அறக்கட்டளை சேர்ந்த பால் மாணிக்கம் என்பவர் வீடியோ பதிவிட்டு இருந்ததை பார்த்தார்.