அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் மனைவி திரு.விஜயலட்சுமி அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருந்து வருகிறது அதிமுக. எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வளர்ச்சி அடைந்த இந்த கட்சியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் வழி நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்
ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்
ஓ.பன்னீர் செல்வம் மனைவியின் உடலுக்கு மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தனியார் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் ஆகியோர் ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு அஞ்சலி