INDIAN 7

Tamil News & polling

அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு!

21 அக்டோபர் 2024 04:06 PM | views : 927
Nature

கடந்த 23 அக்டோபர் 2023-ல் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார் கௌதமி.
நடிகை கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு
ராம் அப்பண்ணசாமி
1 min read
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி, தடா பெரியசாமி உள்ளிட்டோருக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகை கௌதமி கடந்த 1997-ல் பாஜக மூத்த தலைவர் அத்வானி முன்பு அக்கட்சியில் இணைந்தார். 25 வருடங்களாக பாஜகவின் உறுப்பினராக இருந்த கௌதமி, கடந்த 23 அக்டோபர் 2023-ல் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார்.

தன்னுடைய சொத்துக்களை அழகப்பன் என்ற நபர் அபகரித்தாகவும், இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவில் இருந்து தனக்கு எந்தவிதமான உதவிகளும் கிடைக்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கௌதமி. இதனை அடுத்து கடந்த 14 பிப்ரவரி 2024-ல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்பு அக்கட்சியில் இணைந்தார் கௌதமி.

இந்நிலையில் கௌதமியை அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமித்து இன்று (அக்.31) அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

அத்துடன் முன்பு பாஜகவின் பட்டியல் அணி மாநில தலைவர் பதவியில் இருந்த தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி, 18-வது மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பு கடந்த 30 மார்ச் 2024-ல் அதிமுகவில் இணைந்தார். தற்போது தடா பெரியசாமியை அக்கட்சியின் அமைப்பான அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் மாநில துணைச் செயலாளராக நியமித்துள்ளார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே உறுதி செய்யப்பட்டது.

Image சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-, சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

Image சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி உள்ள அதிமுகவில் இணைவதில்லை என தீர்மானம் நிறைவேறப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது,'

Image சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Image சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது.

Image திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தீபம் ஏற்ற காவல் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இது



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்