Tamil News & polling
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சாரதா என்பவரும், தெலுங்கு ஆசிரியராக நரேந்தர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் மூலம் மாணவிகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தெலுங்கு ஆசிரியர் நரேந்தர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்தனர்.
தனியார் தொண்டு நிறுவனம் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு அகில் மகாஜனக்கு புகார் அனுப்பினர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சிர்சில்லா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் குமார் நரேந்திர சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பள்ளியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக தலைமை ஆசிரியை சாரதாவிடம் 15 நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அவர் நடவடிக்கை எடுக்காமல் ஆசிரியருக்கு சாதகமாக மவுனமாக இருந்தார்.
தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress