INDIAN 7

Tamil News & polling

உலக நாயகன் பட்டத்தை துறக்கிறேன் - கமல்ஹாசன் சொல்லும் காரணம் என்ன?

11 நவம்பர் 2024 07:56 AM | views : 67
Nature

சென்னை: ‘உலக நாயகன்’ என தனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தைத் துறப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு சிறப்பு பட்டம் கொடுத்து விளிப்பதும், திரைத்துறையினரே அவர்களுக்கு பட்டம் கொடுப்பது சினிமாவில் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் நடிப்பு, இயக்கம், பாடகர் என பல்துறை வித்தகராக வலம் வரும் கமல்ஹாசனுக்கு ‘உலக நாயகன்’ என்ற பட்டம் உண்டு. அதைத் துறப்பதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், 'என் மீது கொண்ட அன்பினால் 'உலகநாயகன்' உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் பிரியத்தை மீது எனக்கு மாறாத நன்றியுணர்வு உண்டு.




சினிமா கலை எந்த ஒரு தனிமனிதனையும் விட பெரியது. அந்த கலையில் மேலும் கற்றுக்கொண்டு பரிணாமம் அடைய விரும்பும் ஒரு மாணவன் நான். பிற கலைகளை போலவே சினிமாவும் அனைவருக்குமானது. திறமையான கலைஞர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள், நல்ல ரசிகர்கள் ஒன்றிணைந்தது தான் சினிமா உருவாகிறது. கதையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை.

கற்றது கைமண் அளவு என்பதை உணர்ந்தவனாகவும் தொடர்ச்சியான முன்னகர்வில் நம்பிக்கை கொண்டு உழைத்து உயர்பவனாகவும் இருப்பதே எனக்கு உவப்பானது. அதனால்தான் நிறைய யோசனைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வர நேர்ந்தது. மேலே குறிப்பிட்டது போன்ற பட்டங்களையும் அடைமொழிகளையும் வழங்கியவர்களுக்கு எந்த மரியாதை குறைவும் வந்துவிடாத வண்ணம் அவற்றை துறப்பது என்பதே அது. எனவே, என் மீது பிரியம் கொண்ட அனைவருக்குமாக ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இனிவரும் காலத்தில் இன்று ரசிகர்களும் ஊடக நண்பர்களும் திரைத்துறையை சார்ந்தவர்களும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தொண்டர்களும், சக இந்தியர்களும் என்னை கமல்ஹாசன் என்றோ கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.






இத்தனை காலமாக நீங்கள் என் மேல் காட்டி வரும் அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சக மனிதர் என்று ஸ்தானத்திலிருந்தும், சினிமாவை நேசிக்கிற நம் அனைவரின் ஒருவனாகவே நான் இருக்க வேண்டும் என்று என் எண்ணத்தில் இருந்தும் இந்த வேண்டுகோள் வெளிப்படுகிறது என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.


உங்கள் நான்,

கமல் ஹாசன். pic.twitter.com/OpJrnYS9g2
— Kamal Haasan (@ikamalhaasan) November 11, 2024

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image 1987-ல் நடக்கும் இந்த கதையில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராஜ்கிரண், அவரது மறைவால் அதிர்ந்து போகிறார். அப்போது அவருக்கு பேரன் பிறக்கிறான். இதனால் தனது பேரன்தான் அடுத்த எம்.ஜி.ஆர். என்று எண்ணி, அவரை எம்.ஜி.ஆரின்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்