POLLING FLAMES

 

பருவ வயதில் காதலர்கள் கட்டிப்பிடித்து முத்தமிடுவது இயல்பானதே - உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

1 year ago 15 நவம்பர் 2024 12:52 PM | views : 246
மதுரை: ''பருவ வயதில் காதலர்கள் கட்டிப்பிடித்து முத்துமிடுவது இயல்பானது ஒன்று தான். இதை ஒரு காரணமாக வைத்து காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தது சரியல்ல'' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 'மனுதாரர் 20 வயதானவர். அவரும் 19 வயது இளம் பெண் ஒருவரும் 2020ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 நவம்பர் மாதத்தில் இருவரும் நேரில் சந்தித்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மனுதாரர் இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண் காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.






இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனுதாரரிடம் இளம் பெண் கூறியுள்ளார். மனுதாரர் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். அதன் பிறகே மனுதாரர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீது உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தி, சித்திரவதை செய்வது அல்லது விரும்பத்தகாத, வெளிப்படையான பாலியல் தொந்தரவு செய்யும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், பருவ வயதில் காதலிக்கும் இருவர் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த இயல்பாக நடந்த ஒன்றை வைத்துக் கொண்டு மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தவிர வேறில்லை.






இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் போலீஸார் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் அந்த வழக்கை நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யலாம். அந்த அடிப்படையில் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN PMK AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் கனமழை பாமக காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் இந்திய அணி கோவை PARLIAMENT ELECTION CONGRESS திருமாவளவன் EDAPPADI PALANISWAMI கொலை அன்புமணி ராமதாஸ் COIMBATORE தமிழ்நாடு சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM AJITH கைது KEERTHY SURESH OPS அமமுக INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL ஓபிஎஸ் TAMIL ACTRESS NELLAI கொரோனா நெல்லை THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் தேவர் SURIYA சூர்யா தூத்துக்குடி வன்னியர் CSK திருப்பரங்குன்றம் அஜித் விடுமுறை RAJINIKANTH மதுரை கள்ளக்காதல் தென்காசி தீபாவளி வடகிழக்கு பருவமழை