INDIAN 7

Tamil News & polling

பருவ வயதில் காதலர்கள் கட்டிப்பிடித்து முத்தமிடுவது இயல்பானதே - உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

15 நவம்பர் 2024 12:52 PM | views : 64
Nature

மதுரை: ''பருவ வயதில் காதலர்கள் கட்டிப்பிடித்து முத்துமிடுவது இயல்பானது ஒன்று தான். இதை ஒரு காரணமாக வைத்து காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தது சரியல்ல'' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 'மனுதாரர் 20 வயதானவர். அவரும் 19 வயது இளம் பெண் ஒருவரும் 2020ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 நவம்பர் மாதத்தில் இருவரும் நேரில் சந்தித்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மனுதாரர் இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண் காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.






இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனுதாரரிடம் இளம் பெண் கூறியுள்ளார். மனுதாரர் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். அதன் பிறகே மனுதாரர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீது உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தி, சித்திரவதை செய்வது அல்லது விரும்பத்தகாத, வெளிப்படையான பாலியல் தொந்தரவு செய்யும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், பருவ வயதில் காதலிக்கும் இருவர் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த இயல்பாக நடந்த ஒன்றை வைத்துக் கொண்டு மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தவிர வேறில்லை.






இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் போலீஸார் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் அந்த வழக்கை நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யலாம். அந்த அடிப்படையில் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.



Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image மதுரை, மதுரை மாநகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 29). மாநகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்தநிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி சில

Image திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்