Tamil News & polling
மதுரை: ''பருவ வயதில் காதலர்கள் கட்டிப்பிடித்து முத்துமிடுவது இயல்பானது ஒன்று தான். இதை ஒரு காரணமாக வைத்து காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்தது சரியல்ல'' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: 'மனுதாரர் 20 வயதானவர். அவரும் 19 வயது இளம் பெண் ஒருவரும் 2020ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2022 நவம்பர் மாதத்தில் இருவரும் நேரில் சந்தித்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மனுதாரர் இளம் பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த இளம் பெண் காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனுதாரரிடம் இளம் பெண் கூறியுள்ளார். மனுதாரர் திருமணத்துக்கு மறுத்துவிட்டார். அதன் பிறகே மனுதாரர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் மீது உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தி, சித்திரவதை செய்வது அல்லது விரும்பத்தகாத, வெளிப்படையான பாலியல் தொந்தரவு செய்யும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், பருவ வயதில் காதலிக்கும் இருவர் ஒருவரையொருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த இயல்பாக நடந்த ஒன்றை வைத்துக் கொண்டு மனுதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தவிர வேறில்லை.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் போலீஸார் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும் அந்த வழக்கை நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யலாம். அந்த அடிப்படையில் மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.'' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தங்க தடையில்லை - மாவட்ட எஸ்.பி.
கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன்
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள்
உலகக் கோப்பையை வென்ற பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பற்றி யாரும் அறியாத
விஜய் DMK Vijay TVK அதிமுக திமுக ADMK சென்னை கனமழை பாஜக தவெக திருமாவளவன் வடகிழக்கு பருவமழை Chennai அண்ணாமலை Annamalai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon BJP தமிழக வெற்றிக் கழகம் Thirumavalavan சீமான் தவெக மாநாடு MK Stalin தீபாவளி AIADMK வானிலை ஆய்வு மையம் PMK தமிழக வெற்றிக்கழகம் Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran மழை இந்திய அணி indian cricket team மு.க.ஸ்டாலின் AMMK Edappadi Palaniswami தமிழக அரசு Tamil Nadu Rain விசிக பாமக செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam தவெக விஜய் பிரதமர் மோடி rain தமிழ்நாடு வேட்டையன் Ajith அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss Rajinikanth VCK PM Modi IMD Udhayanidhi Stalin GetOut Stalin Sengottaiyan வானிலை அமரன் Tirunelveli ராமதாஸ் இந்தியா TVK Vijay நடிகை கஸ்தூரி Ind vs Nz காங்கிரஸ் GetOut Modi Vettaiyan Heavy Rain மதுரை M.K. Stalin திமுக அரசு Ramadoss தனுஷ் கோலிவுட் கைது ரஜினிகாந்த் திருச்செந்தூர் டிடிவி தினகரன் திருநெல்வேலி நயினார் நாகேந்திரன் விடுமுறை