Tamil News & polling
நெல்லை மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணைக்கு அழைத்த நிலையில் ஆவணங்களை வாங்காமல் ஒருதலைபட்சமாக பேசியதால் கூட்டத்திலிருந்து வெளியேறிய இந்துமுன்னணி மாநில துணை தலைவர் V.P.ஜெயக்குமார்..
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கிறிஸ்தவ மதத்தை பெருமையாகவும் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிவரும் தமிழக சபாநாயகர் அப்பாவு தேரோட்டத்தை துவக்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் சார்பில் இந்துமுன்னணி புகார் அளித்துள்ளது...
இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி சப் கலெக்டர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆவணங்களுடன் ஆஜராக இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் திரு V.P.ஜெயக்குமார் அவர்களுக்கு சேரன்மகாதேவி உதவி கலெக்டர் சம்மன் அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து துணை ஆட்சியர் முன்பு ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
அதில் சபாநாயகர் அப்பாவு அவர்கள் கிறிஸ்தவர்களை உயர்வாக பேசியதையும், இந்து மதம் குறித்து இழிவாக பேசியதையும் ஒரு பென் டிரைவில் பதிவு செய்து சார் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.
அதை பெற்றுக்கொள்ள மறுத்த சேரன்மகாதேவி சப் கலெக்டர் இந்த வீடியோ பதிவு எனக்கு தேவையில்லை. இது பொது கோவில் யார் வேண்டுமானாலும் போகலாம் என்று பேசினார்.
அதற்கு இந்துமுன்னணி நிர்வாகி பொதுக் கோவில் என்றால் சமுதாய பாகுபாடின்றி இந்துக்கள் செல்லலாமே தவிர வேறு மதத்தவர்கள் செல்லக்கூடாது என்று அறநிலையத்துறை சட்டமே உள்ளது என்றும்,
பல கோவில்களில் வேற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகைகளே வைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை ஏற்று நம்பிக்கையோடு வழிபடுவதாக அலுவலகத்தில் கையொப்பமிட்டால் தான் ஆலய மரபு படி விழாவில் பங்கேற்க முடியும் என்று கூறியபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவர் நீங்கள் தடுக்க கூடாது என்பதை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்.
நாங்கள் கொடுக்கும் ஆவணங்களை பார்த்தால் தானே இந்து மதம் பற்றி இழிவாக பேசியது தெரியும் அதை வாங்கவே மறுத்தால் இது எப்படி நியாயமான விசாரனையாக இருக்க முடியும் ?
ஆகையால் விசாரணையை புறக்கணித்து இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் அவர்கள் வெளியேறினார்.
விசாரணை என்று அழைத்து விட்டு இந்துக்கள் தரப்பின் விளக்கத்தைக் கூட முறையாக கேட்காத சேரன்மகாதேவி சப்கலெக்டரின் இச்செயலை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இந்துக்களின் எதிர்ப்பையும் சபாநாயகர் அப்பாவு நாளை தேர் இழுக்க அனுமதித்தால் இந்துக்களை திரட்டி இந்துமுன்னணி போராட்டம் நடத்தும் என இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தெரிவித்தார்..
@AppavuSpeaker @Collectortnv @dinamalarweb @DinamaniDaily @TamilTheHindu @TamilJanamNews
#திருநெல்வேலி #உவரிசுயம்புலிங்கசுவாமி #தேரோட்டம் #சபாநாயகர் #அப்பாவு #இந்துமுன்னணி

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress