சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது.தீபாவளிப் பண்டிகையொட்டி அசுர வேகத்தில் உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த அக். 17 ஆம் தேதி வரலாற்றில் முதல்முறையாக சவரன் ரூ. 97,600-க்கு விற்பனை செய்யப்பட்டது..இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. 4 நாள்களில் சவரனுக்கு ரூ. 4,000 குறைந்துள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 11,500-க்கும், ஒரு சவரன் ரூ. 92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. 320 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ. 11,540-க்கும், ஒரு சவரன் ரூ. 92,320-க்கும் விற்பனையாகிறது.
இதனிடையே, தொடர்ந்து குறைந்து வரும் வெள்ளியின் விலை, இன்றும் கிராமுக்கு ரூ. 3 குறைந்து ரூ. 171-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S