INDIAN 7

Tamil News & polling

ராகுல் காந்தி மெஸ்ஸியை சந்தித்தார்!

13 டிசம்பர் 2025 04:12 PM | views : 70
Nature

அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். 3 நாள் சுற்றுப்பயணத்தின்படி, இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு இன்று அதிகாலை வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் மெஸ்சியின் உருவச்சிலை நிறுவப்பட்டது. கையில் உலக கோப்பையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மெஸ்சி காணொலி மூலம் திறந்து வைத்து உள்ளார்.

மெஸ்சியின் வருகையையொட்டி அங்குள்ள 78 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மெஸ்ஸி இன்று பங்கேற்றார்.

கொல்கத்தா பயணம் முடிந்ததும், மெஸ்சி இன்று இரவு ஐதராபாத்துக்கு சென்றார். ஐதராபாத்தில் மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.. மெஸ்ஸியை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து ஐதராபாத் சென்றார்.

✊ ⚽ pic.twitter.com/ffycRR3Q6f

— Congress (@INCIndia) December 13, 2025 இந்த நிலையில், ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் மெஸ்ஸியை ராகுல் காந்தி சந்தித்து பேசினார் . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடினார் . பின்னர் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்தார் .

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்