POLLING FLAMES 📊 TN ELECTION 2026
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 22 வயதாகும் பவித்ரா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் ஒரு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அத்துடன் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்திருக்கிறார்.
இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் அடிக்ககடி எல்லை மீறியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த மாணவனின் பெற்றோர், மாணவனை டியூசன் அனுப்புவதை நிறுத்தி உள்ளார்கள். ஆனாலும் டியூசன் ஆசிரியை, மாணவன் இடையே எல்லை மீறிய உறவு தொடர்ந்து வந்துள்ளதாம். இதனை கண்டுபிடித்த பெற்றோர், தனது மகனுக்கு தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்கள். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஆசிரியை பவித்ராவை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக சென்னையிலும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கு இன்னும் திருமணமாகவில்லை.. அதே பகுதியிலுள்ள துணிக்கடை ஒன்றில் இந்த பெண் வேலை பார்த்து வந்தார். அதே துணிக்கடையில் 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வருகிறார். ஒரே கடையில் பணிபுரிவதால், அந்த பெண்ணும், சிறுவனும் சகஜமாக பழகினார்கள்.. நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறி உள்ளது.
ஒருகட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்கள். அத்துடன் பல்வேறு இடங்களுக்கு சென்று 2 பேரும் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார்கள் ஒரு கட்டத்தில் இருவரும் திடீரென கல்யாணமும் செய்து கொண்டனர். இந்த விவகாரம் வெளியே வந்த நிலையில், 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் 17வயது மாணவனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்த 24வது இளம் பெண் அண்மையில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அந்த இளம்பெண் தனது வீட்டுக்கு மாணவரை அடிக்கடி வரவழைத்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த மாணவர் அதற்கு சம்மதிக்க மறுத்து விட்டார்.தன்னை காதலித்துவிட்டு, தன்னோடு ஜாலியாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண், மாணவர் பயிலும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று முதல்வரிடம் முறையிட்டிருக்கிறார். இதையடுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து மாணவரை இடைநீக்கம் செய்தார்கள். இந்த விவகாரம் அப்போதுதான் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனை அறிந்த மாணவரின் தாயார், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், மாணவரை வீட்டுக்கு அழைத்து கட்டயாப்படுத்தி உல்லாசமாக இருந்ததாக இளம்பெண் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று பேர் இப்படி கைதாகி உள்ளனர்.
« முந்தைய செய்தி (Previous)
கணவரை பிரிந்து வேறு திருமணம் செய்வதற்காக குழந்தையை கொன்று உடலை...அடுத்த செய்தி (Next) »
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: