ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.
நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இது வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் உள்ள நிலையில், சூர்யாவிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் இந்த கடிதத்தை எழுத வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
'ஜெய்பீம்' திரைப்படத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருக்கிறது என்றும்,
உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்ற போதிலும், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைக்கும் காட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் திரைப்படமானது அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை... என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை தரும் ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என்றும் அந்த கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும், சில மாதங்களுக்கு முன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் தி.மு.க.
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!