POLLING FLAMES

 

வன்னியர்களை இழிவுபடுத்திய சூர்யாவுக்கு அன்புமணி எச்சரிக்கை!

4 years ago 10 நவம்பர் 2021 10:39 AM | views : 249
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என எச்சரித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அதில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயம் திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இது வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இதே உணர்வும், மன நிலையும் உள்ள நிலையில், சூர்யாவிடமிருந்து அறமற்ற அமைதி மட்டுமே வெளிவந்து கொண்டிருப்பதால் தான் இந்த கடிதத்தை எழுத வேண்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

'ஜெய்பீம்' திரைப்படத்தில் காவல்துறை சார்பு ஆய்வாளரின் வீட்டில், உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும் கூட, அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்னிக் கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம்பெற்று இருக்கிறது என்றும்,

உண்மையான நிகழ்வில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் சார்பு ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்ற போதிலும், அந்த பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி, வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ.குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைக்கும் காட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெய்பீம் திரைப்படமானது அமைதியை சிதைத்து சமூக மோதலை ஏற்படுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இத்தகைய திரைப்படம் தங்களின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளிவந்திருப்பது நியாயமற்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை... என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

படைப்பாளிகளை விட அவர்களுக்கு வாழ்க்கை தரும் ரசிகர்கள் தான் பெரியவர்கள். இந்தப் படத்தில் நீங்கள் உங்களின் வன்மத்தைக் காட்டினால், அடுத்து உங்களின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்கள் தங்களின் கோபத்தைக் காட்டக்கூடும் என்றும் அந்த கடிதத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK AIADMK ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் பாராளுமன்ற தேர்தல் கனமழை தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் காங்கிரஸ் PARLIAMENT ELECTION இந்திய அணி தமிழகம் CONGRESS கோவை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை திருமாவளவன் INDIAN CRICKET TEAM அமமுக கைது AJITH KEERTHY SURESH சீமான் OPS தமிழ்நாடு பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS ஓபிஎஸ் தீபாவளி நெல்லை NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN கள்ளக்காதல் அஜித் தேவர் வன்னியர் தூத்துக்குடி ELECTION COMMISSION SURIYA தென்காசி வடகிழக்கு பருவமழை RAJINIKANTH விடுமுறை CSK கீர்த்தி சுரேஷ் சூர்யா திருப்பரங்குன்றம் மதுரை