ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனை ஏன் சாதி அடையாளத்திற்குள் கொண்டு வந்தீர்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பதே தனது எதிர்வினை என அவர் கூறியிருக்கிறார்.
''கோவிந்தனை வன்னியரா பார்க்கக் கூடாது, கம்யூனிஸ்டா தான் பார்க்கனுமாம்.. அப்போ படத்தில் போலீஸை கொடூர வில்லனா மட்டும் காட்டியிருக்கலாம், ஏன் சாதி அடையாளம் வந்தது? எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பது தானே எதிரிவினையாக இருக்கும்'' என அவர் தெரிவித்திருக்கிறார்.
இதன் மூலம் ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனுக்கு ஏன் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரின் பெயரை சூட்டி சாதிய அடையாளம் ஏற்படுத்தினீர்கள் என படக்குழுவை சூசகமாக வினவியிருக்கிறார் ஷியாம் கிருஷ்ணசாமி. கோவிந்தனை வன்னியராக பார்க்கக்கூடாது அவரை கம்யூனிஸ்டாக மட்டும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். இதனிடையே சூர்யாவை நடிகன் என குறிப்பிட்டுள்ள ஷியாம் கிருஷ்ணசாமி அவரது வசனத்திற்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார்.
ஷியாம் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ள கோவிந்தன் தான், ராஜாகண்ணுவுக்கு நீதி கோரி முதல் நபராக போராட்டத்தை முன்னெடுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவரை வன்னியராக பார்க்கக்கூடாது கம்யூனிஸ்டாக பார்க்க வேண்டும் என நேற்று முதல் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
வில்லனுக்கு மட்டும் வன்னியர் சமுதாய முத்திரை, நல்லவருக்கு மட்டும் கட்சி முத்திரையா என்பதே ஷியாம் கிருஷ்ணசாமி எழுப்பியுள்ள கேள்வியாகும். குறவருக்கு பதில் இருளர், படம் எடுக்கப்போவதாக அனுமதி பெறவில்லை, கேள்விக்கு பதிலில்லை என நாளுக்கு நாள் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை அதிகமாகி கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!