INDIAN 7

Tamil News & polling

வில்லனுக்கு சாதி முத்திரை; நல்லவருக்கு கட்சி முத்திரை; அன்புமணிக்கு ஆதரவாக கிருஷ்ணசாமி மகன்!

19 நவம்பர் 2021 06:15 AM | views : 723
Nature

ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனை ஏன் சாதி அடையாளத்திற்குள் கொண்டு வந்தீர்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பதே தனது எதிர்வினை என அவர் கூறியிருக்கிறார்.

''கோவிந்தனை வன்னியரா பார்க்கக் கூடாது, கம்யூனிஸ்டா தான் பார்க்கனுமாம்.. அப்போ படத்தில் போலீஸை கொடூர வில்லனா மட்டும் காட்டியிருக்கலாம், ஏன் சாதி அடையாளம் வந்தது? எல்லா சாதியிலும் திருடன் இருக்கிறான் என நடிகன் சொல்லும் போது, எல்லா சாதியிலும் நல்லவன் இருக்கிறான் என்பது தானே எதிரிவினையாக இருக்கும்'' என அவர் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனுக்கு ஏன் மறைந்த வன்னியர் சங்கத் தலைவரின் பெயரை சூட்டி சாதிய அடையாளம் ஏற்படுத்தினீர்கள் என படக்குழுவை சூசகமாக வினவியிருக்கிறார் ஷியாம் கிருஷ்ணசாமி. கோவிந்தனை வன்னியராக பார்க்கக்கூடாது அவரை கம்யூனிஸ்டாக மட்டும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். இதனிடையே சூர்யாவை நடிகன் என குறிப்பிட்டுள்ள ஷியாம் கிருஷ்ணசாமி அவரது வசனத்திற்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறார்.

ஷியாம் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ள கோவிந்தன் தான், ராஜாகண்ணுவுக்கு நீதி கோரி முதல் நபராக போராட்டத்தை முன்னெடுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவரை வன்னியராக பார்க்கக்கூடாது கம்யூனிஸ்டாக பார்க்க வேண்டும் என நேற்று முதல் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

வில்லனுக்கு மட்டும் வன்னியர் சமுதாய முத்திரை, நல்லவருக்கு மட்டும் கட்சி முத்திரையா என்பதே ஷியாம் கிருஷ்ணசாமி எழுப்பியுள்ள கேள்வியாகும். குறவருக்கு பதில் இருளர், படம் எடுக்கப்போவதாக அனுமதி பெறவில்லை, கேள்விக்கு பதிலில்லை என நாளுக்கு நாள் ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை அதிகமாகி கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாட்டில் அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களால் ஏற்பட்டிருக்கும் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக மாநிலம்

Image சென்னை, பா.ம.க. செய்தி தொடர்பாளர் (அன்புமணி தரப்பு) வக்கீல் பாலு, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒரு அரசியல் கட்சியில் செயற்குழு,

Image சேலம், சேலத்தில் இன்று (திங்கட்கிழமை) டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 11.30 மணி வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு

Image டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்

Image சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வரும் 29-ம் தேதி சேலம்

Image டிட்வா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்