கேரளா மாநிலம், கோட்டயம் அருகே உள்ள சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், சங்கனாச்சேரி போலீசில் சமீபத்தில் ஒரு புகார் தந்தார்.. அந்த புகாரில் உள்ள சுருக்கம் இதுதான்: "என்னுடைய கணவர், அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க என்னை வற்புறுத்துகிறார்... இதற்கு உடன்படாததால் என்னை கொடுமைபடுத்துகிறார்... எனது கணவரின் நண்பர்களும், அவர்களின் மனைவியரை இதுபோல மாற்றி கொள்கிறார்கள்... இதற்காக சோஷியல் மீடியாவில் துனியாக குழு அமைத்து செயல்படுகிறார்கள்... அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இப்படி ஒரு புகாரை பார்த்து போலீஸ் அதிகாரிகளே அதிர்ந்து போய்விட்டனர்.. எனவே, உடனடியாக இதை பற்றி விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டனர்... சைபர் கிரைம் போலீசாரும், புகார் கொடுத்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்களின் செல்போன் நம்பர்களை வைத்து விசாரணை ஆரம்பித்தனர்.. அப்போதுதான், இவர்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு ஸ்பெஷலான குரூப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்..
"கப்பிள் மீட் அப் கேரளா" என்று அதற்கு பெயர்.. இந்த க்ரூப்பில், அவரவர் மனைவிகளை மாற்றி கொண்டு, அந்த மனைவிகளிடம் ஜாலியாக இருந்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. யாருக்கெல்லாம் இன்னொருத்தர் மனைவி தேவையோ, அவர்கள் இந்த குரூப்பில் உறுப்பினராக இணைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பல் மெசஞ்சர், டெலகிராம் போன்றவற்றின் மூலமும் உறுப்பினர்களை சேர்த்துள்ளது..
இப்படி மொத்தம் 1000 தம்பதிகள் இந்த குழுவில் இணைந்துள்ளனர்.. கேரளா மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்தவர் 1000 தம்பதிகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.. இவர்களை தவிர கல்யாணம் ஆகாதவர்களும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இப்படி கல்யாணம் ஆகாதவர்கள், மாற்றான் மனைவியுடன் ஜாலியாக இருக்க வேண்டும் என்றால், அவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு பணம் வசூலிக்கப்படுமாம்..
இந்த பணம், குரூப் அட்மின் எனப்படும் குழுவை தொடங்கியவர்களுக்கு வருமானமாய் கிடைத்துள்ளது... இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, முதற்கட்டமாக இந்த குழுவை சேர்ந்த 7 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.. இவர்களுடன் தொடர்பில் இருந்த முக்கியமான 25 நபர்களை கண்காணித்தும் வருகிறார்கள். அநேகமாக அவர்களும் கைதாவார்கள் என்று தெரிகிறது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரிகள் சொல்லும்போது, "வெளிநாடுகள், மேலை நாட்டு கலாச்சாரத்தில் இதுபோன்ற மனைவிகளை மாற்றும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.. இப்போது இந்த பழக்கம் கேரளாவிலும் பரவி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது... இதில் ஈடுபடுவோர் ஒருத்தரையும் விடாமல் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்... சோஷியல் மீடியாவில் இப்படி க்ரூப்கள் வைத்து மனைவிகளையும், இளம்பெண்களையும் மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து திரட்டி வருகிறோம்.. அவர்களையும் விரைவில் கைது செய்வோம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!