INDIAN 7

Tamil News & polling

ஓபிஎஸ், ஈபிஸை தனியாக சந்திக்க மறுத்த பிரதமர் மோடி!

By E7 Tamil 11 நவம்பர் 2022 11:08 AM
Nature

திண்டுக்கல் விழாவுக்கு வரும் மோடியை தனித்தனியாக சந்தித்துப் பேச அனுமதி கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

50 பேரில் ஒருவராக வரிசையில் நின்று வரவேற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தற்போது 4 பிரிவுகளாக உடைந்துள்ளது. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. தன்னை பொதுச் செயலாளராக ஏற்கும் பட்சத்தில் மட்டுமே இணைப்பை ஏற்க முடியும் என்று அவர் கூறி வருகிறார்.

இதனால் அவரை பணிய வைக்க அவருக்கு வேண்டிய காண்ட்ராக்டர்களிடம் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும் எடப்பாடி பிடிவாதமாக உள்ளார். இந்தநிலையில் திண்டுக்கல் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மோடி பிற்பகல் 2.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அவரை வரவேற்கவும், தனித்தனியாக சந்தித்து பேசவும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களை சந்திக்க மோடி மறுத்து விட்டார். கடந்த இரு முறை அவர் சென்னை வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி வரவேற்புக்கும், வழியனுப்பு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி அளித்தனர். ஆனால் இந்த முறை அதற்கும் அனுமதிக்கவில்லை.

மதுரை விமானநிலையத்தில் 50 அழைப்பாளர்களுக்கு மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்கின்றனர். பாஜக தரப்பில் மேலிட பார்வையாளர் சுதாகர்ரெட்டி, எச்.ராஜா, முருகானந்தம் ஆகியோர் வரவேற்கின்றனர். அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்த ராஜன்செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களும் வரிசையில் நின்று வரவேற்க வேண்டும். யாரையும் மோடி தனியாக சந்தித்து பேச மாட்டார் என்று அதிகாரிகள் அறிவித்து விட்டனர்.

இதனால் இரு தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மோடியை வரவேற்க இன்று காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து எடப்பாடி புறப்பட்டுச் சென்றார். காலை 11.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார். இருவரும் மதுரையில் தனித்தனி ஓட்டலில் தங்கியுள்ளனர். விமானநிலையத்தில் ஒரே வரிசையில் தனித்தனியாக நின்று வரவேற்கின்றனர்.இரு அதிமுக தலைவர்களையும் மோடி தனியாக சந்திக்க மறுத்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம்

Image சென்னை, கடந்த 2001-06 அதிமுக ஆட்சி காலகட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏவாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்து வந்த சுதர்சனம், பெரியபாளையம் அருகே உள்ள தானாக்குளத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.கடந்த

Image சென்னை , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்!

Image பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- கோயம்புத்தூரின் வரவேற்பு எப்போதும் போல் உண்மையில் சிறப்பாக இருந்தது. துடிப்பான இந்த நகரைச் சேர்ந்த மக்களின் அன்பு, பாசம் மற்றும் வாழ்த்துகள்

Image கோவை, கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை

Image புதுடெல்லி, பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- மக்களின் மனதை திருடியிருக்கிறோம்.

Image கைக்கொடுக்காத ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம் பிரச்சாரம்; பீகாரில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கான 3 காரணங்கள் இங்கே பீகார் காங்கிரசில் பலருக்கு, இந்த எழுத்து பல நாட்களாக

Image பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில்



Whatsaap Channel


சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு


கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்


நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு


ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு


விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்