ஓபிஎஸ், ஈபிஸை தனியாக சந்திக்க மறுத்த பிரதமர் மோடி!

நவம்பர் 11, 2022 | 11:08 am | views : 128
திண்டுக்கல் விழாவுக்கு வரும் மோடியை தனித்தனியாக சந்தித்துப் பேச அனுமதி கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
50 பேரில் ஒருவராக வரிசையில் நின்று வரவேற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தற்போது 4 பிரிவுகளாக உடைந்துள்ளது. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பாஜக தலைமை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. தன்னை பொதுச் செயலாளராக ஏற்கும் பட்சத்தில் மட்டுமே இணைப்பை ஏற்க முடியும் என்று அவர் கூறி வருகிறார்.
இதனால் அவரை பணிய வைக்க அவருக்கு வேண்டிய காண்ட்ராக்டர்களிடம் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும் எடப்பாடி பிடிவாதமாக உள்ளார். இந்தநிலையில் திண்டுக்கல் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மோடி பிற்பகல் 2.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அவரை வரவேற்கவும், தனித்தனியாக சந்தித்து பேசவும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களை சந்திக்க மோடி மறுத்து விட்டார். கடந்த இரு முறை அவர் சென்னை வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி வரவேற்புக்கும், வழியனுப்பு விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி அளித்தனர். ஆனால் இந்த முறை அதற்கும் அனுமதிக்கவில்லை.
மதுரை விமானநிலையத்தில் 50 அழைப்பாளர்களுக்கு மோடியை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கம்தென்னரசு, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்கின்றனர். பாஜக தரப்பில் மேலிட பார்வையாளர் சுதாகர்ரெட்டி, எச்.ராஜா, முருகானந்தம் ஆகியோர் வரவேற்கின்றனர். அவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்த ராஜன்செல்லப்பா, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களும் வரிசையில் நின்று வரவேற்க வேண்டும். யாரையும் மோடி தனியாக சந்தித்து பேச மாட்டார் என்று அதிகாரிகள் அறிவித்து விட்டனர்.
இதனால் இரு தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மோடியை வரவேற்க இன்று காலை 9.45 மணிக்கு சென்னையில் இருந்து எடப்பாடி புறப்பட்டுச் சென்றார். காலை 11.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார். இருவரும் மதுரையில் தனித்தனி ஓட்டலில் தங்கியுள்ளனர். விமானநிலையத்தில் ஒரே வரிசையில் தனித்தனியாக நின்று வரவேற்கின்றனர்.இரு அதிமுக தலைவர்களையும் மோடி தனியாக சந்திக்க மறுத்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![]() |
![]() |
![]() |
![]() |
நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in
என்ற இணையதள
இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..!
ஆண், பெண் என அனைவரும் தற்போதைய காலத்தில் மேக்கப் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தான், ஆழகுசாதன பொருட்கள், மேக்கப் டிப்ஸ் ஆகிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளது.
அதிலும் குறிப்பாக “Diamond Lips” என்ற ஹேஷ்டேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அதிகமாக மேக்கப் போடாமல் குறைந்த