நடிகர் விஜய்க்கு தற்போது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும் சந்தித்தார். இதில் அவர் கலந்து கொள்ள வந்த காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரின் விளைவாக தற்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் தற்போது பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ஹைதராபாத்தில் நடந்த நிலையில், தற்போது சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிரம்மாண்டமாக செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் விஜய், ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் முக்கிய நடிகர்கள் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம்... தன்னுடைய ரசிகர்களையும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களையும் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ள விஜய்... கடந்த 20 தேதி அன்று வழக்கம் போல் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்து பேசியது மட்டும் இன்றி புகைப்படமும் எடுத்து கொண்டார்.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கு விஜய் சில ஆலோசனைகளை அழகியதாக கூறப்படுகிறது. குறிப்பாக மக்கள் தன்னுடைய படங்கள் வெளியாகும் போது, அதிகம் செலவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முதலில் குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதே போல் பண உதவி செய்யமுடியாவிட்டாலும், உங்களால் முடிந்தவரை சமூக சேவைகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவுங்கள் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டதுடன், நிகழ்ச்சியின் இறுதியில் ரசிகர்களுடன் புகைப்படங்களையும் எடுத்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சி சுமூகமாக முடிந்த நிலையில், தற்போது விஜய் வந்த கார் தான் அவருக்கு பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் தன்னுடைய காஸ்ட்லி காரில் வந்த போது, இதில் தடை செய்யப்பட்ட கருப்பு நிற சன் ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததால், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
இருட்டு கடை அல்வாவை சுவைத்த முதல்வர்!
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!