இம்பேக்ட் பிளேயர் என்ற புதிய முறை மூலமாக போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே விளையாடும் 11 வீரர்களில் ஒருவரை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14-வது ஓவர் முடியும் முன்பாக அணியின் ஒரு வீரரை மாற்றிக் கொள்ள முடியும் எனவும், அவர் பேட்டிங், பவுலிங் செய்யலாம் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.
அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதே போன்று ஏற்கனவே ஆட்டமிழந்த பேட்ஸ்மேனுக்கு பதிலாக புது பேட்ஸ்மேனை 14வது ஓவர் முடிவதற்குள் கொண்டு வரலாம். இதே போன்று ஒரு வீரர் சில ஓவர் வீசிய பிறகு, அவர் பந்துவீச்சு எடுப்படவில்லை என தெரிந்தால் 14 வது ஓவருக்கு முன் அவரை மாற்றி வேறு ஒரு வீரரை இம்பேக்ட் பிளேயிராக மாற்றலாம்.
11 வீரர்களைக் கொண்ட விளையாடும் அணியை அறிவிக்கும் போதே, மாற்று வீரரையும் அறிவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து போட்டிகளில் மாற்று வீரரை களமிறக்குவது போல, கிரிக்கெட் போட்டிகளிலும் மாற்று வீரரை முழுமையாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வரும் 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனால் ஐபிஎல் தொடர் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ நடத்தும் பிரதான டி20 தொடர்களில் ஒன்றான சையது முஸ்தாக் அலி தொடரில் முதல் முறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அமலுக்கு வந்தது குறிப்பிடதக்கது.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து
நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!
மனித நேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!