INDIAN 7

Tamil News & polling

வங்கதேசத்தை வெளுத்தெடுத்த இந்தியா… 409 ரன்கள் குவிப்பு

By E7 Tamil 10 டிசம்பர் 2022 11:42 AM
Nature

வங்கதேசத்திற்கு எதிரான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 409 ரன்களை குவித்துள்ளது. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார்.

சட்டோக்ராம் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், இஷான் கிஷன் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

அனுபவம் மிக்க வீரரான தவான் 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்தபோது மெஹதி ஹசன் பந்துவீச்சி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலியுடன் இணைந்த இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார்.


விராட் கோலி சிங்கிள்களை எடுத்துக் கொடுக்க மறுமுனையில் இஷான் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசி வங்கதேச பந்து வீச்சை கலங்கடித்தார். 131 பந்துகளை எதிர்கொண்ட அவர், 24 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அந்த வகையில் பல்வேறு சாதனைகளை இஷான் இன்றைக்கு முறியடித்திருக்கிறார்.



தன் பங்கிற்கும் சதம் அடித்த விராட் கோலி 91 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 113 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 409 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 410 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

Ind vs Ban | மீண்டும் டாஸில் தோற்ற இந்தியா... ரோஹித்துக்கு பதிலாக ஓபனிங்கில் இளம்வீரர்.. குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு

முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. இந்நிலையில் கடைசிப் போட்டியில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரராக ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாடினார். இந்த மாற்றத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.



Whatsaap Channel


வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில் மனு

வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்: நீதிமன்றத்தில் சீமான் பதில்


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு


குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று


திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா


பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அனுமதி: விரிவான விசாரணை நடத்த



Tags

விஜய் DMK Vijay அதிமுக TVK திமுக ADMK சென்னை கனமழை திருமாவளவன் தவெக பாஜக வடகிழக்கு பருவமழை அண்ணாமலை Chennai எடப்பாடி பழனிசாமி Northeast Monsoon Annamalai தமிழக வெற்றிக் கழகம் BJP Thirumavalavan தவெக மாநாடு MK Stalin சீமான் தீபாவளி வானிலை ஆய்வு மையம் AIADMK தமிழக வெற்றிக்கழகம் PMK Seeman TVK Conference முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TTV Dhinakaran இந்திய அணி தமிழக அரசு மு.க.ஸ்டாலின் Edappadi Palaniswami indian cricket team Tamil Nadu AMMK மழை விசிக பிரதமர் மோடி Tamilaga Vettri Kazhagam Anbumani Ramadoss Rain பாமக PM Modi அன்புமணி ராமதாஸ் தவெக விஜய் செங்கோட்டையன் Udhayanidhi Stalin தமிழ்நாடு Ajith வேட்டையன் VCK Rajinikanth IMD காங்கிரஸ் இந்தியா ராமதாஸ் Ind vs Nz நடிகை கஸ்தூரி அமரன் TVK Vijay GetOut Stalin rain Ramadoss Tirunelveli திமுக அரசு GetOut Modi ரஜினிகாந்த் தனுஷ் Sengottaiyan திருநெல்வேலி M.K. Stalin Heavy Rain Vettaiyan விடுமுறை மதுரை கோலிவுட் வானிலை திருச்செந்தூர் கைது நயினார் நாகேந்திரன் டிடிவி தினகரன்