இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தம் இரண்டு விதமான கோச்சுகள் உள்ளன. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் மற்றும் எக்கனாமிக் சேர் கார் என இது பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான டிக்கெட் விலையை பொறுத்தவரை எக்ஸிக்யூடிவ் சேர் காரில் சென்னையிலிருந்து நெல்லை வரை பயணிக்க ரூபாய் 3000 கட்டணமாகவும் எக்னாமிக்ஸ் சேர்காரில் ரூபாய் 1400 முதல் 1500 வயதான கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது பயணிகளுக்கு உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நெல்லை சென்னை இடையே உள்ள பயண நேரம் சுமார் 10 மணி நேரமாக இருப்பது 8 மணி நேரமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை வந்தே பாரத் ரயில் காலை 6 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னைக்கு சென்றடையும் என்றும், அதே நேரம் சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு நெல்லையை வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது