நாங்குநேரிக்கு அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவு கட்டளை? ஓட்டுநரின் வீடியோவால் பரபரப்பு!

By Admin | Published in செய்திகள் at ஜூன் 06, 2024 வியாழன் || views : 569

நாங்குநேரிக்கு அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவு கட்டளை? ஓட்டுநரின் வீடியோவால் பரபரப்பு!

நாங்குநேரிக்கு அரசு பேருந்துகளை இயக்கக்கூடாது என சபாநாயகர் அப்பாவு கட்டளை? ஓட்டுநரின் வீடியோவால் பரபரப்பு!

நெல்லை மாவட்டம் நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்குள் அரசு பேருந்துகள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன என பல ஆண்டுகளாக பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜூன்5) இரவு நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து ஓட்டுனர் நாங்குநேரி செல்லும் பயணிகளை ஏற்ற மறுத்துள்ளார்.

அப்பொழுது அரசு பேருந்து ஓட்டுனருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு பயணி நாங்குநேரிக்கு போகாதது குறித்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் கேட்கும் போது சபாநாயகர் அப்பாவு மற்றும் வள்ளியூர் வணிகர் சங்கம் இணைந்து முடிவெடுத்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து செல்ல வேண்டாம் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாங்குநேரி ஒரு சட்டமன்றத் தொகுதி மற்றும் தாலுகாவின் தலைநகராக உள்ளது. இங்கு தாலுகா அலுவலகம் மாவட்ட நீதிமன்றம் காவல் நிலையம் மருத்துவமனை என பல்வேறு சேவைகளுக்கு நாங்குநேரி வட்டாரம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நெல்லை மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அரசு பேருந்துகள் வழியில் உள்ள முக்கிய ஊரான நாங்குநேரிக்குள் செல்லாமல் பல நேரங்களில் புறவழிச் சலையில் பயணிகளை இறக்கி விட்டு செல்லும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது.

அனைத்து பேருந்துகளும் நாங்குநேரி ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி வர வேண்டும் என அரசு உத்தரவு இருந்தும் அதனை செயல்படுத்தாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் பெற்ற சிறப்பு உத்தரவு இருந்தும் அதனை மதிக்காத அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் ஊழியர்களும் சட்ட விரோதமாக அரசு பேருந்துகளை புறவழிச் சாலையில் இயக்கி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளும் எம்எல்ஏ எம்பிக்களும் வேடிக்கை பார்க்கின்றனர் என கூறும் பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் சபாநாயகர் அப்பாவுவை தொடர்புபடுத்தி நெல்லையில் பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் அரசு பேருந்து செல்ல வேண்டாம் என கூறியதாக வெளியான வீடியோ தகவலால் நாங்குநேரி தொகுதி வாழ் மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர்.

NANGUNERI GOVERNMENT BUS APPAVU அரசு பேருந்து சபாநாயகர் அப்பாவு திருநெல்வேலி நாங்குநேரி
Whatsaap Channel
விடுகதை :

எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


விடுகதை :

பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?


விடுகதை :

உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ் மேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், ஒரு மாணவரை இன்னொரு மாணவர் அரிவாளால் வெட்டியிருப்பதும், அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. கல்வியும், ஒழுக்கமும் கற்பிக்கப்பட வேண்டிய பள்ளியில் இத்தகைய நிகழ்வுகள்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்

வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்


ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல  - உயர்நீதிமன்றம்


கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்


நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி

நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next