வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்தப் போட்டியில் ஜூன் 9ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.
கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடமாக ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் மட்டுமே மோதி வருகின்றன. அந்த வகையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே தனித்துவமான மவுசு காணப்படுவது வழக்கமாகும். இம்முறை கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் தோற்ற பாகிஸ்தான் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
எனவே அந்த மொத்த வெறியையும் இந்திய அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் காண்பித்து வெற்றிக்கு போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அப்போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானத்தை நினைக்கும் போதே பல ரசிகர்கள் ஏமாற்றமடைகிறார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த உலகக் கோப்பைக்காகவே பிரத்தியேகமாக நியூயார்க் நகரில் புதிய மைதானம் கட்டமைக்கப்பட்டு அதில் செயற்கையான பிட்ச் பொருத்தப்பட்டுள்ளது.
அந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே இலங்கையை 77 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா அதை சேசிங் செய்ய 16.2 ஓவர்களை எடுத்துக் கொண்டது. அதே போல அயர்லாந்தை 96 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா ஒரு தலைப்பட்சமாக வென்றது. அதற்கு நியூயார்க் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமின்றி பவுலர்களுக்கு அதிக சாதகமாக இருப்பதே முக்கிய காரணமாகும்.
அதனால் அங்கு நடைபெறும் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் போன்ற உணர்வை கொடுப்பதாக ரசிகர்கள் அதிருப்தி வெளிப்படுத்தினர். மேலும் மைக்கேல் வாகன், வாசிம் ஜாபர், இர்பான் பதான் போன்ற பல முன்னாள் வீரர்கள் நியூயார்க் பிட்ச் தரமற்றதாக இருப்பதாக விமர்சித்தனர். இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன் நியூயார்க் பிட்ச் தரமானதாக புணரமைக்கப்படும் என்று ஐசிசி உறுதியளித்துள்ளது.
இது பற்றி ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு. “டி20 ஐஎன்சி மற்றும் ஐசிசி ஆகியவை நாஸவ் சர்வதேச மைதானத்தில் இதுவரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பிய படி சீராக விளையாடவில்லை என்பதை அங்கீகரிக்கின்றன. இந்த நிலைமையை சரி செய்வதற்கும் மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த மைதானக்குழு கடுமையாக உழைத்து வருகிறது” என்று கூறியுள்ளது.
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகி.. மனிதர்களையும் கடிக்கத் துணிந்த திமுகவினர் - டிடிவி தினகரன்...
ஏசி பயன்படுத்திய காமராஜர்..! ஏசி பயன்படுத்திய புகைப்படம்.. ஆதாரம் கொடுத்த திமுக
கூட்டணி ஆட்சிதான்... அமித்ஷா கூறுவதே எனக்கு வேத சத்தியம் - அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!