INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

ஐசிசி விதிமுறையால் தோற்ற வங்கதேசம்.. விதிமுறை சொல்வது என்ன?

ஐசிசி விதிமுறையால் தோற்ற வங்கதேசம்.. விதிமுறை சொல்வது என்ன?
ஜூன் 11, 2024 | 12:44 am | Views : 41

விறுவிறுப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. ஜூன் 10ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் 20 ஓவரில் திணறலாக விளையாடிய அந்த அணி வெறும் 113/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 46, டேவிட் மில்லர் 29 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் சாகிப் 3, தஸ்கின் அஹ்மத் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 114 ரன்களை துரத்திய வங்கதேச அணியும் 20 ஓவரில் வெறும் 109/7 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது.

வெற்றியை பறித்த விதிமுறை:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தவ்ஹீத் ஹ்ரிடாய் 3, முகமதுல்லா 20 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 3 விக்கட்டுகள் சாய்த்தார். இந்த வெற்றியால் சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று தென்னாப்பிரிக்கா அசத்தியது. முன்னதாக இந்தப் போட்டியில் ஓட்நெய்ல் பார்ட்மேன் வீசிய 18வது ஓவரின் இரண்டாவது பந்தை வங்கதேச வீரர் முகமதுல்லா அடிக்கத் தவறி காலில் வாங்கினார்.

அதனால் தென்னாபிரிக்க அணியினர் எல்பிடபுள்யூ முறையில் அவுட் கேட்டனர். அப்போது களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுத்தார். அதற்கிடையில் முகமதுல்லா காலில் பட்ட பந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுக்காததால் பவுண்டரிக்கு சென்றது. அந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து முகமதுல்லா டிஆர்எஸ் எடுத்தார்.

அதை 3வது நடுவர் சோதித்த போது ஸ்டம்ப் மீது பந்து படாதது தெரிந்தது. அதனால் 3வது நடுவர் அந்த தீர்ப்பை மாற்றி நாட் அவுட் வழங்கினார். ஆனால் களத்தில் இருந்த நடுவர் முதலில் அவுட் கொடுத்த காரணத்தால் அந்தப் பந்தில் வங்கதேசத்திற்கு பவுண்டரி கிடைக்கவில்லை. ஒருவேளை களத்தில் இருந்த நடுவர் அவுட் கொடுக்காமல் இருந்திருந்தால் லெக் பைஸ் அடிப்படையில் வங்கதேசத்திற்கு 4 ரன்கள் கிடைத்திருக்கும்.


அதனால் கடைசியில் வங்கதேசம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்காது. ஆனால் ஐசிசி “அப்பென்டிக்ஸ் டி விதிமுறைப்படி” டிஆர்எஸ் எடுத்ததும் அந்த பந்து காலாவதியாகி விட்டதாக கருதப்படும். அதனால் அவுட் என்று வழங்கப்பட்ட தீர்ப்பு நாட் அவுட்டாக மாற்றி வழங்கினாலும் அந்த பந்து காலாவதியாகிவிட்டதால் அதில் எடுக்கப்பட்ட ரன்கள் கொடுக்கப்படாது என்பது ஐசிசி விதிமுறையாகும். இந்த விதிமுறை தற்போது தங்களின் வெற்றியை பறித்ததால் வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.

Keywords: 2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை BANGLADESH TEAM ICC RULES RSA VS BAN SOUTH AFRICA இந்திய அணி ஐசிசி தென்னாப்பிரிக்க அணி

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?


விடுகதை :

பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?


விடுகதை :

தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?


இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!

2024-07-25 11:32:52 - 1 day ago

இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் தற்போது இலங்கை நாட்டிற்கு சென்று அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய


டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி

2024-07-25 03:07:33 - 1 day ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம்


இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி

2024-07-22 01:47:16 - 5 days ago

இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்றது. அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர். அதே போல ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த சுழல் பந்து


இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!

2024-07-20 10:13:55 - 6 days ago

இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!
இலங்கைக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அந்தத் தொடர்களில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழுவும் கௌதம் கம்பீரும் புதிய கேப்டனாக


பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்

2024-07-20 00:47:12 - 1 week ago

பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்
விரைவில் துவங்கும் இலங்கை டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற


300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் சஞ்சு சாம்சன்!

2024-07-15 07:23:17 - 1 week ago

300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. இளம் வீரர்களை


முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!

2024-07-14 17:26:49 - 1 week ago

முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி ஜூலை 14ஆம் தேதி இந்திய


10 விக்கெட்ஸ்.. ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்தியா.. 8 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

2024-07-13 18:08:33 - 1 week ago

10 விக்கெட்ஸ்.. ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்தியா.. 8 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி
ஜிம்பாப்வே நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில்


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.