INDIAN 7

Tamil News & polling

சம்மன் - தேடல் முடிவுகள்

சீமானுக்கு எதிரான நடிகையின் பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சீமானுக்கு எதிரான வழக்கை புலன் விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி அளித்த புகாரின்​பேரில், சென்னை வளசர​வாக்கம் போலீ​ஸார் பாலியல் துன்​புறுத்தல் உள்ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு

பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? செய்தியாளர்களிடம் கொந்தளித்த சீமான் சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது. அதன்பின், சீமான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது வேண்டாத

கைது, மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - சீமான் பேட்டி சென்னை, நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- "விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன்.

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!! நெல்லை மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!! சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணைக்கு அழைத்த நிலையில் ஆவணங்களை வாங்காமல் ஒருதலைபட்சமாக பேசியதால் கூட்டத்திலிருந்து வெளியேறிய இந்துமுன்னணி மாநில துணை தலைவர் V.P.ஜெயக்குமார்.. திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும்

தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்! நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று (நவ. 27) தீர்ப்பளித்துள்ளது. .ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரிய வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர். திருமண உறவிலிருந்து பிரிவதாக ஒருமித்த கருத்தின்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் மயிலாடுதுறை,கடந்த 2003-ம் ஆண்டு மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ஆஜராகும்படி திருமாவளவனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் திருமாவளவன்

சிறுமி பாலியல் வழக்கு எந்த நேரத்திலும் எடியூரப்பாக கைதாகலாம்! உதவி கேட்டு வந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார் எடியூரப்பா என மார்ச் மாதம் பெங்களூர் சதாசிவ நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரிக்கின்றனர். ஆனால் தேர்தல் ஆதாயத்துக்காக இத்தகைய புகார் தெரிவிக்கப்படுகிறது என எடியூரப்பா மறுத்திருந்தார்.அத்துடன் போக்சோ வழக்கை

நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அந்த வகையில் கடந்த மாதம் 6ம் தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை எழுப்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ்

ஜெயக்குமார் கொலை? பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் மாயமான நிலையில் அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தீயில் எரிந்து கரிக்கட்டையான நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த

நெல்லை காங். தலைவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: 30 பேருக்கு சம்மன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன் தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவர் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. தற்போது விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்