Tamil News & POLLING

 

இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி நடக்கும் பார்படாஸ் மைதானம்

1 year ago 19 ஜூன் 2024 10:05 AM 146 views
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை தோற்கடித்த இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. மேலும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, அர்ஷ்தீப் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

எனவே இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சமீப காலங்களாகவே பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற டாப் அணிகளை தோற்கடித்துள்ள ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது. எனவே ரசித் கான் தலைமையில் முகமது நபி, குர்பாஸ் போன்ற தரமான வீரர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று நம்பலாம்.


அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 1930 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் 2008 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வரலாற்றில் 29 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது.

அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 18 வெற்றிகளையும் சேசிங் செய்த அணிகள் 8 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா இங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வரலாற்றில் 8 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 7 வெற்றிகளை பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.


பார்படாஸ் நகரில் இப்போட்டி நடைபெறும் நாளன்று வானம் மேகமூட்டத்துடன் லேசாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே லேசாக மழையின் குறுக்கீடு இருந்தாலும் முடிவு கிடைக்கும் அளவுக்கு இப்போட்டி நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.


பார்படாஸ் மைதானம் வரலாற்றில் பவுலர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 138 ரன்களாகும். இங்கு அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் 224 ரன்கள். வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு 170 ரன்கள்.


எனவே பேட்ஸ்மேன்கள் இங்கே பெரிய ரன்கள் குவிப்பதற்கு சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடுவது அவசியமாகிறது. மேலும் இங்கே முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிகமாக வென்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து நல்ல ஸ்கோர் அடிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS சீமான் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி தமிழகம் ரஜினிகாந்த் PMK கனமழை INDIAN CRICKET TEAM பாமக காங்கிரஸ் UDHAYANIDHI STALIN அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி CONGRESS கைது KEERTHY SURESH NELLAI வடகிழக்கு பருவமழை அமமுக கொலை EDAPPADI PALANISWAMI SEEMAN ELECTION COMMISSION கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி TAMIL ACTRESS கோவை திருநெல்வேலி OPS COIMBATORE THOOTHUKUDI சட்டசபை தேர்தல் மதுரை தமிழ்நாடு நாம் தமிழர் கட்சி கீர்த்தி சுரேஷ் AJITH கொரோனா ஓபிஎஸ் MADURAI NORTHEAST MONSOON தேவர் வன்னியர் THIRUMAVALAVAN பாலியல் தொல்லை தமிழக அரசு விடுமுறை TAMIL CINEMA நெல்லை டிரெண்டிங் திருமாவளவன் திருப்பரங்குன்றம் தீபாவளி நயினார் நாகேந்திரன் டாப் நியூஸ்