ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக பார்படாஸ் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதோடு 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 தொடரை வென்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பெற்ற வெற்றி நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை எந்த ஒரு ஆட்டத்திலையுமே தோல்வியை சந்திக்காமல் இறுதிவரை வெற்றி நடை போட்டு கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பை ஆகியவற்றை நெஞ்சில் பற்றி குத்திக் கொள்ளப் போவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்றால் அதனை பச்சை குத்தி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை தற்போது இந்த டி20 உலக கோப்பையை நாங்கள் ஜெயித்து உள்ளோம்.
எனவே ஜூன் 29ஆம் தேதியையும், இந்த டி20 உலக கோப்பை டிராபியையும் நான் நெஞ்சில் பதித்துக் கொள்ள போகிறேன். அதேபோன்று ஜூன் 29-ஆம் தேதி என்னுடைய தங்கையின் பிறந்த நாள் என்பதால் அது ஒரு கூடுதல் பரிசாக அவருக்கு அமையும்.
என் வாழ்நாளில் இந்த நாள் நினைவில் இருக்க வேண்டும் என்பதாலே இந்த முடிவை எடுத்து உள்ளேன் என்றும் உலககோப்பையை வென்றது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும் என சூரியகுமார் யாதவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய
இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!