ஃபைனல் ஆட்டநாயகன் விருதை பும்ராவுக்கு கொடுத்திருக்கலாம்.. மஞ்ரேக்கர் கருத்து

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூலை 01, 2024 திங்கள் || views : 577

ஃபைனல் ஆட்டநாயகன் விருதை பும்ராவுக்கு கொடுத்திருக்கலாம்.. மஞ்ரேக்கர் கருத்து

ஃபைனல் ஆட்டநாயகன் விருதை பும்ராவுக்கு கொடுத்திருக்கலாம்.. மஞ்ரேக்கர் கருத்து

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே எதிரணிகளை தோற்கடித்து வந்த இந்தியா மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.

அந்தப் போட்டியுடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி 2012, 2014, 2016, 2021, 2022 ஆகிய வருடங்களில் தோல்வியை சந்தித்தார். ஆனால் சச்சின் போலவே தன்னுடைய 6வது முயற்சியில் டி20 உலகக் கோப்பையை வென்ற அவர் சாம்பியனாக விடை பெற்றார்.


சொல்லப்போனால் அத்தொடரில் முதல் 7 போட்டிகளில் 75 மட்டுமே எடுத்து சொதப்பிய அவர் முக்கியமான இறுதிப்போட்டியில் 76 ரன்கள் அடித்தார். அதனால் ஃபைனலில் ஆட்டநாயகன் விருதை வென்று தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்து விராட் கோலி விடைபெற்றார். இந்நிலையில் ஒருவேளை இந்தியா தோல்வியை சந்தித்திருந்தால் 128 ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக விளையாடிய விராட் கோலி விமர்சிக்கப்பட்டிருப்பார் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடைசி நேரத்தில் அழுத்தத்திற்கு அஞ்சாமல் துல்லியமாக பந்து வீசி வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற பவுலர் தான் ஃபைனலில் ஆட்டநாயகன் விருதை வெல்வதற்கு தகுதியானவர் என்றும் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அந்த இன்னிங்ஸ் விளையாடியதன் காரணமாக ஹர்திக் பாண்டியா வெறும் 2 பந்துகளை மட்டும் எதிர்கொள்ள வேண்டிய கடினமான பேட்ஸ்மேனாக களமிறங்கினார்”

“இந்தியாவின் பேட்டிங் நன்றாக இருந்ததாகவே நான் நினைத்தேன். ஆனால் விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸ் இந்தியாவை இறுக்கமான நிலைக்குத் தள்ளியது. அது கடைசியில் பவுலர்கள் வெற்றியை பெற்றுக் கொடுத்தாக வேண்டும் என்ற நிலையை நிரூபித்தது. அந்த நேரத்தில் தென்னாபிரிக்காவுக்கு 90% வெற்றி வாய்ப்பிருந்ததால் இந்தியா தோல்வியின் இடத்தில் இருந்தது”


“அங்கே இந்தியா திருப்பு முனையை நிகழ்த்தியது தான் விராட் கோலியை காப்பாற்றியது. ஏனெனில் அவர் 128 ஸ்ட்ரைக் ரேட்டில் கிட்டத்தட்ட பாதி இன்னிங்ஸ் விளையாடினார். எனவே என்னுடைய ஆட்டநாயகனாக ஒரு பவுலர் இருந்திருப்பார். ஏனெனில் அவர்கள் தான் உண்மையில் தோல்வியின் பிடியிலிருந்து ஆட்டத்தை எடுத்து இந்தியாவுக்கு கொடுத்தார்கள்” என்று கூறினார்.

2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை FINAL INDIAN CRICKET TEAM MAN OF THE MATCH SANJAY MANJREKAR VIRAT KOHLI இந்திய அணி சஞ்சய் மஞ்சரேக்கர் விராட் கோலி
Whatsaap Channel
விடுகதை :

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?


விடுகதை :

கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?


விடுகதை :

அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?


37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய

7 சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

7  சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!


வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு


தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!


அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?


டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு எதிரான தி.மு.க. அரசின் அடக்குமுறை கண்டனத்திற்குரியது - டி.டி.வி.தினகரன்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next