அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வென்ற இந்திய ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் பகல் இரவாக துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் கோல்டன் டக் அவுட் ஆகி சென்றார். அதே போல இரண்டாவது விக்கெட்டுக்கு 69 ரன்கள் அமைத்து அசத்திய ராகுலையும் 37 ரன்களில் அவுட்டாக்கிய ஸ்டார்க் அடுத்து வந்த விராட் கோலியையும் 7 ரன்களில் பெவிலியன் அனுப்பினார்.
அதற்கிடையே மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த சுப்மன் கில் 31 ரன்களில் அவுட்டாகி எமாற்றத்துடன் சென்றார். அடுத்ததாக வந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 3 ரன்னில் அவுட்டானதால் 87-5 என இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அப்போது நித்திஷ் ரெட்டி நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நங்கூரத்தை போட முயற்சித்த ரிஷப் பண்ட் 21 ரன்களில் அவுட்டானார்.
அடுத்ததாக வந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக 22 (22) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய நித்திஷ் ரெட்டி நல்ல பந்துகளுக்கு மதிப்பு கொடுத்து சுமாரான பந்துகளை அதிரடியாக எதிர்கொண்டார். குறிப்பாக ஸ்டார்க், போலண்ட் ஆகியோருக்கு எதிராக அவர் அடித்த சிக்ஸர்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அந்த வகையில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் மூன்று பவுண்டரி மூன்று சிக்சருடன் 42 (54) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக இளம் வீரர் நித்திஸ் ரெட்டி இந்த தொடரில் தான் இந்தியாவுக்காக அறிமுகமானார்.
அந்த வாய்ப்பில் இதுவரை அவர் 3 இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி, தோனி, கங்குலி கபில் தேவ், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன் போன்ற ஜாம்பவான்களை விட நித்திஷ் ரெட்டி அதிக சிக்ஸர்களை அடித்துள்ளார். மேற்குறிப்பிட்ட ஜாம்பவான் வீரர்கள் 5 அல்லது குறைவான சிக்ஸர்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவில் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!