INDIAN 7

Tamil News & Polling

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

அரசியல் கருத்து கணிப்பு விளையாட்டு சினிமா விடுகதைகள் நடிகைகள்

பாகிஸ்தான் நம்மை 119 ரன்களுக்கு அவுட்டாக்க முடிந்தால் நம்மாலும் அவர்களை சுருட்ட முடியும் : ரோகித் சர்மா

பாகிஸ்தான் நம்மை 119 ரன்களுக்கு அவுட்டாக்க முடிந்தால் நம்மாலும் அவர்களை சுருட்ட முடியும் : ரோகித் சர்மா
ஜூன் 09, 2024 | 11:53 pm | Views : 37

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அற்புதமான வெற்றி பெற்றது. ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் தோல்வியை சந்திக்கும் என்று பெரும்பாலனவர்கள் எதிர்பார்த்தனர்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப், நாசீம் ஷா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து 120 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு ஆரம்பம் முதலே கட்டுக்கோப்புடன் துல்லியமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் அதிரடி காட்ட விட முடியாமல் மடக்கிப்பிடித்தனர்.


அதனால் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி பரிதாபமாக தோற்றது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் முதல் முறையாக வெற்றியைப் பெற்று செய்து இந்தியா சாதனை படைத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் பவுலர்களால் நம்மை 119 ரன்களுக்கு அவுட்டாக்க முடிந்தால் நம்மாலும் அவர்களை சுருட்ட முடியும் என்று இந்திய வீரர்களிடம் சொன்னதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. பாதி இன்னிங்ஸில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து பார்ட்னர்ஷிப் அமைக்க தவறிய நாங்கள் கொஞ்சம் குறைந்த ரன்கள் எடுத்தோம்”

“இது போன்ற பிட்ச்சில் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்று பேசினோம். கடந்த போட்டியை விட உண்மையாகவே இது நல்ல பிட்ச்சாக இருந்தது. அதில் எங்களிடம் நல்ல பவுலிங் வரிசை இருந்ததால் வெற்றிக்கான தன்னம்பிக்கையும் இருந்தது. போட்டியின் பாதியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது எங்கள் வீரர்கள் அனைவரையும் ஒன்றாக இணைத்து “இது நமக்கு நடந்தால் அது அவர்களுக்கும் நடக்கும்” என்று சொன்னேன்”


“அனைவரும் வெளிப்படுத்தும் சிறிய பங்கு கூட வெற்றியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். பும்ரா தன்னுடைய பலத்தை வைத்து செல்கிறார். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அறிவோம். அவரைப் பற்றி அதிகமாக பேச விரும்பவில்லை. இந்த உலகக்கோப்பை முழுவதும் அவர் இதே மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அவர் ஜீனியஸ் என்பதை நாம் அறிவோம். ரசிகர்கள் கூட்டம் சூப்பர். நாங்கள் விளையாடும் போதெல்லாம் அவர்கள் எங்களை ஏமாற்றுவதில்லை. அவர்கள் வீட்டுக்கு பெரிய புன்னகையுடன் செல்வார்கள் என்று உறுதியாக சொல்வேன். இது ஆரம்பம் மட்டுமே இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது” என்று கூறினார்.

Keywords: 2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை IND VS PAK INDIAN CRICKET TEAM PAKISTAN TEAM ROHIT SHARMA இந்திய அணி பாகிஸ்தான் அணி ரோஹித் சர்மா

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.

விடுகதை :

அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?


விடுகதை :

கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?


விடுகதை :

எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?


இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!

2024-07-25 11:32:52 - 1 day ago

இந்தியா இலங்கை டி20 தொடரை இந்த சேனலில் பார்க்கலாம்.. ஓசில பாக்க முடியாது!
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையில் தற்போது இலங்கை நாட்டிற்கு சென்று அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன் பின்னர் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய


டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி

2024-07-25 03:07:33 - 2 days ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிச்சயம் படைப்போம் – இங்கிலாந்து வீரர் போப் பேட்டி
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம்


இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி

2024-07-22 01:47:16 - 5 days ago

இந்திய அணியில் நிலையான இடமில்லை... அக்சர் படேல் பேட்டி
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்றது. அந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர். அதே போல ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் பட்டேல் சிறந்த சுழல் பந்து


இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!

2024-07-20 10:13:55 - 6 days ago

இலங்கை தொடரில் ருதுராஜ், சாம்சன் கழற்றி விடப்பட அவர் தான் காரணம்.!
இலங்கைக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அந்தத் தொடர்களில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக் குழுவும் கௌதம் கம்பீரும் புதிய கேப்டனாக


பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்

2024-07-20 00:47:12 - 1 week ago

பாவம் பாண்டியா.. கம்பீர் தான் பாண்டியாவை கழற்றி விட்டுள்ளார்.. கம்பீரின் தவறை விமர்சித்த ஸ்ரீகாந்த்
விரைவில் துவங்கும் இலங்கை டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2022க்குப்பின் ரோஹித் ஓய்வெடுத்த பெரும்பாலான டி20 தொடர்களில் பாண்டியா தான் கேப்டனாக செயல்பட்டார். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை வென்ற


300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் சஞ்சு சாம்சன்!

2024-07-15 07:23:17 - 1 week ago

300 சிக்ஸர்களை அடித்த ஏழாவது இந்திய வீரர் சஞ்சு சாம்சன்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 42 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை (4-1) என்ற கணக்கில் கைப்பற்றிய அசத்தியது. இளம் வீரர்களை


முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!

2024-07-14 17:26:49 - 1 week ago

முதல் பந்தில் அதிக ரன் எடுத்து ஜெய்ஸ்வால் மாபெரும் உலக சாதனை!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதில் 4 போட்டிகளில் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் இந்த தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி ஜூலை 14ஆம் தேதி இந்திய


10 விக்கெட்ஸ்.. ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்தியா.. 8 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி

2024-07-13 18:08:33 - 1 week ago

10 விக்கெட்ஸ்.. ஜிம்பாப்வே அணியை அசால்ட்டாக ஊதி தள்ளிய இந்தியா.. 8 வருடங்கள் கழித்து சாதனை வெற்றி
ஜிம்பாப்வே நாட்டில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த சூழ்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் நான்காவது போட்டி ஜூலை 13ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரே நகரில்


திமுக எம்பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!


பாமகவினர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை உடனடியாக திரும்பப் பெறுக - டிடிவி தினகரன்!


நடிகர்கள் அரசியல்வாதி ஆவதில் தவறு இல்லை: நடிகர் விஷால்


அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய பைடன்.. புது வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு


சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை.. போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


குஜராத்தில் இருந்து லண்டனுக்கு பழைய காரில் 2½ மாதம் பயணம் செய்த குடும்பத்தினர்!


நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது


Follow Me

எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.