Tamil News & polling
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஜூன் ஒன்பதாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி 4 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தடுமாறிய ரோகித் சர்மா 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அதனால் 19/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருக்கு எதிர்ப்புறம் நிதானமாக விளையாடி கைகொடுக்க முயற்சித்த அக்சர் பட்டேல் 20 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் 7, சிவம் துபே 3 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.
மாஸ் கம்பேக் வெற்றி:
அடுத்த ஓவரிலேயே மறுபுறம் போராடிய ரிஷப் பண்ட் 42 (31) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா 0, ஹர்டிக் பாண்டியா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் கடைசியில் அர்ஷ்தீப் சிங் 9, சிராஜ் 7* ரன்கள் எடுத்தும் 19 ஓவரில் 119 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டானது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நாசீம் ஷா 3, ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 120 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 13 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார். அதேபோல மறுபுறம் தடுமாறிய முகமது ரிஸ்வான் 7 ரன்களில் கொடுத்த கேட்சை சிவம் துபே கோட்டை விட்டார்.
அதனால் ரசிகர்கள் கடுப்பான நிலையில் அடுத்ததாக வந்து தடுமாறிய உஸ்மான் கான் 13 ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார். அதைத்தொடர்ந்து வந்த பஃக்கார் ஜமான் அதிரடியாக விளையாடி 13 (8) ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்த போது பாண்டியா வேகத்தில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் நங்கூரமாக விளையாடிய ரிஸ்வானை 31 ரன்கள் பும்ரா கிளீன் போல்ட்டாக்கி திருப்பு முனையை உண்டாக்கினார்.
அதைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் அடுத்ததாக வந்த சடாப் கான் 4, இப்திகார் அகமது 5 ரன்களில் அவுட்டாகி சென்றனர். அதனால் கடைசியில் நாசீம் ஷா 10* (4) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
குறிப்பாக 120 ரன்கள் கூட எடுக்காததால் இப்போட்டியில் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சவாலான பிட்ச்சில் துல்லியமாக பந்து வீசிய இந்தியா டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை கட்டுப்படுத்தி அபார சாதனை படைத்து வரலாற்றின் மாஸ் கம்பேக் கொடுத்தது. இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 138/6 ரன்கள் கட்டுப்படுத்தியதே இந்தியாவின் முந்தைய சாதனையாகும்.
இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஆல் அவுட்டான ஒரு போட்டியில் வெற்றியைப் பெற்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அந்தளவுக்கு பந்து வீச்சில் தெறிக்க விட்ட இந்தியா சார்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் கொடுத்து 3, ஹர்திக் பாண்டியா 2, அக்சர் படேல் 1, அர்ஷ்தீப் 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP எடப்பாடி பழனிசாமி Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran திருமாவளவன் ADMK AIADMK டிடிவி தினகரன் AMMK Thirumavalavan MK Stalin மு.க.ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss PMK சீமான் செங்கோட்டையன் தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman Congress சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை பாமக முக ஸ்டாலின் Nellai Tamilaga Vettri Kazhagam உதயநிதி ஸ்டாலின் நெல்லை தமிழகம் Thoothukudi காங்கிரஸ்