ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ஜூன் 14ஆம் தேதி நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு ட்ரினிடாட் நகரில் 29வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பப்புவா அணி ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறியது. அந்த வகையில் மிகவும் திண்டாட்டமாக பேட்டிங் செய்த அந்த அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு 9 வீரர்கள் 20 ரன்கள் தாண்டாத நிலையில் அதிகபட்சமாக கிப்லின் டோரிகா 27 ரன்கள் எடுத்தார்.
வெளியேறிய நியூஸிலாந்து:
ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பரூக்கி 3, நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 96 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் குர்பாஸ் 11, இப்ராஹிம் ஜாட்ரான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் குல்பதின் நைப் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடி 49* (36) ரன்கள் எடுத்தார்.
அவருடன் ஓமர்சாய் 13, முகமது நபி 16* ரன்கள் எடுத்ததால் 15.1 ஓவரிலேயே 101/3 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் குரூப் சி பிரிவின் புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் (+2.596) அணியை விட +4.230 என்ற அற்புதமான ரன் ரேட்டை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது.
இது இந்த உலகக் கோப்பையில் விளையாடும் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்ற 19 அணிகளை விட அதிகமாகும். இந்த வெற்றியால் சூப்பர் 8 சுற்றுக்கும் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான் அசத்தியது. குறிப்பாக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய அந்த அணி கடைசி நேரத்தில் சொதப்பி லீக் சுற்றுடன் வெளியேறியது.
ஆனால் இந்தத் தொடரில் அந்த தவறை செய்யாத ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று குரூப் 1 பிரிவில் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. மறுபுறம் இந்த தோல்வியால் அதே பிரிவில் 2 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த நியூசிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இதன் வாயிலாக 1987 உலகக் கோப்பைக்குப் பின் 37 வருடங்கள் கழித்து நியூஸிலாந்து அணி முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறி சோகத்தை சந்தித்துள்ளது.
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!