ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. குறிப்பாக ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, சிவம் துபே 27, ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த தென்னாபிரிக்கா முடிந்த அளவுக்கு போராடியும் 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டீ காக் 39, கிளாஸின் 52 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
விராட் கோலி ஓய்வு:
அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்து சரித்திரம் படைத்தது. இந்த வெற்றிக்கு 76 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவே என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. இதையே நான் சாதிக்க விரும்பினேன். ஒரு நாள் உங்களால் எதுவும் முடியாது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அது நடக்கும். கடவுள் இஸ் கிரேட். இந்த தருணத்தில் எப்போதும் இருந்ததில்லை. இதுவே இந்தியாவுக்காக நான் விளையாடிய கடைசி டி20 போட்டி. நாங்கள் உலகக் கோப்பையை தூக்க விரும்பினோம்”
“இதை வெளிப்படையான ரகசியமாக வைத்திருக்க விரும்பினேன். ஒருவேளை தோல்வியை சந்தித்து இருந்தால் கூட இதை நான் சொல்லியிருக்க மாட்டேன். ஏனெனில் இது டி20 கிரிக்கெட்டில் வருங்கால தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரமாகும். ஐசிசி தொடரில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம்”
“ரோகித் சர்மாவை பாருங்கள். வெற்றிக்காக அவர் ஒன்பது டி20 உலகக் கோப்பைகள் காத்திருந்தார். அவர் தான் இதற்கு முழுமையாக தகுதியானவர். எங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த நாளுக்காக மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் தன்னுடைய கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!