என்னை விட ரோஹித் சர்மாதான் சாம்பியனாக தகுதியானவர்.. இதான் என்னோட கடைசி டி20.. கிங் கோலி அறிவிப்பு

By Admin | Published in விளையாட்டு செய்திகள் at ஜூன் 30, 2024 ஞாயிறு || views : 209

என்னை விட ரோஹித் சர்மாதான் சாம்பியனாக தகுதியானவர்.. இதான் என்னோட கடைசி டி20.. கிங் கோலி அறிவிப்பு

என்னை விட ரோஹித் சர்மாதான் சாம்பியனாக தகுதியானவர்.. இதான் என்னோட கடைசி டி20.. கிங் கோலி அறிவிப்பு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. குறிப்பாக ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் படேல் 47, சிவம் துபே 27, ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த தென்னாபிரிக்கா முடிந்த அளவுக்கு போராடியும் 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டீ காக் 39, கிளாஸின் 52 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

விராட் கோலி ஓய்வு:
அதனால் 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்து சரித்திரம் படைத்தது. இந்த வெற்றிக்கு 76 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதுவே என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. இதையே நான் சாதிக்க விரும்பினேன். ஒரு நாள் உங்களால் எதுவும் முடியாது என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அது நடக்கும். கடவுள் இஸ் கிரேட். இந்த தருணத்தில் எப்போதும் இருந்ததில்லை. இதுவே இந்தியாவுக்காக நான் விளையாடிய கடைசி டி20 போட்டி. நாங்கள் உலகக் கோப்பையை தூக்க விரும்பினோம்”

“இதை வெளிப்படையான ரகசியமாக வைத்திருக்க விரும்பினேன். ஒருவேளை தோல்வியை சந்தித்து இருந்தால் கூட இதை நான் சொல்லியிருக்க மாட்டேன். ஏனெனில் இது டி20 கிரிக்கெட்டில் வருங்கால தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரமாகும். ஐசிசி தொடரில் வெற்றி பெறுவதற்கு நாங்கள் நீண்ட காலம் காத்திருந்தோம்”



“ரோகித் சர்மாவை பாருங்கள். வெற்றிக்காக அவர் ஒன்பது டி20 உலகக் கோப்பைகள் காத்திருந்தார். அவர் தான் இதற்கு முழுமையாக தகுதியானவர். எங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இந்த நாளுக்காக மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்” என்று கூறினார். அந்த வகையில் தன்னுடைய கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளார்.

2024 T20 WORLDCUP 2024 டி20 உலக கோப்பை IND VS RSA INDIAN CRICKET TEAM MAN OF THE MATCH RETIRMENT VIRAT KOHLI இந்திய அணி ரோஹித் சர்மா விராட் கோலி
Whatsaap Channel
விடுகதை :

சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?


விடுகதை :

சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?


விடுகதை :

ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?


37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

37 வயதில் சச்சின், சேவாக், டிராவிட்டை முந்திய ரோஹித் சர்மா.. ஜெயசூர்யாவை முந்தி உலக சாதனை

கட்டாக் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிப்ரவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 305 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய

7 சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

7  சிக்ஸ் 119 ரன்ஸ்.. ஃபார்முக்கு திரும்பி இங்கிலாந்தை வெளுத்த ஹிட்மேன்.. கெயிலை முந்தி 2வது உலக சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு 81 ரன்கள்

கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்

கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்


செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!


வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு


தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!

தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!


அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?

அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!


prev whatsapp Twitter facebook next