'யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என எடப்பாடிக்கு சொல்ல தகுதி இல்லை' என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி பேசுகையில், ''யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் தான். நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என எழுதிக் கொடுத்து வந்து விட்டீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்கிறீர்கள். அதைச் சொல்ல வேண்டியது சிவில் நீதிமன்றம். நீங்கள் திரும்பத் திரும்ப தவறு செய்கிறீர்கள். உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதில் முடிவு எடுக்க வேண்டியது சிவில் நீதிமன்றம் தான்.
ஒரே அக்கிரமம் அநியாயமாக இருக்கிறது. உச்சபட்சமாக மேலேபோய் நின்று கொண்டு யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது, நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறீர்கள்; பொதுக்குழு உங்களிடம் தான் இருக்கிறது; கட்சி உங்கள் கையில்தான் இருக்கிறது; சின்னம் கூட இருக்கிறது. எல்லாத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே உங்களிடம் இருந்தும் என்ன ஆச்சு. பேரூராட்சியில் ஜீரோ. ஆனால் உங்களிடம் தான் பொதுக்குழு இருக்கிறது. நகராட்சியிலும் ஜீரோ. ஆனால் பொதுக்குழு உங்களிடம் தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக கம்ப்ளீட்டாக ஜீரோ. முதலில் தேனி வந்து கொண்டிருந்தது அதுவும் இப்பொழுது சேர்த்து ஜீரோ ஆகிவிட்டது. ஆனால் கட்சியும் பொதுக்குழுவும் உங்கள் கையில்தான் இருக்கிறது. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்து கொண்டே வெற்றிபெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் சில பூத்துகளில் ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு பதிவாகி இருக்கிறது. இந்த கொடுமையை நீங்கள் எங்குமே பார்த்திருக்க முடியாது. ஆனால் பொதுக்குழு உங்கள் கையில் தான் இருக்கிறது. இப்பொழுது ஒரு பர்சன்டேஜ் ஓட்டு ஜாஸ்தியாக வாங்கிவிட்டேன் என்று சொல்கிறார். காது குத்துற வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் பழனிசாமி'' என்றார்.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
கண் உண்டு ஆனால் பார்க்க முடியாது அது என்ன?
சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;- "பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்று அனைவரின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறு இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற சூழல் உருவாகி
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது. தமிழகத்தின் வட மாவட்டங்களை பாலைவனமாக்கும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் . பாலாற்றின் குறுக்கே மீண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு
திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், மருத்துவர் அய்யா திரு.ராமதாஸ் அவர்களை டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை நிமித்தமான சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்
சென்னை, சென்னை ஐகோர்ட்டில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பல புகார்களை அனுப்பியுள்ளேன். அ.தி.மு.க., உள்கட்சி தொடர்பாக சிவில் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!