அதிகாரிகள் உல்லாசத்திற்கு அழைக்கிறார்கள் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

அதிகாரிகள் உல்லாசத்திற்கு அழைக்கிறார்கள் : தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

  அக்டோபர் 11, 2021 | 12:40 pm  |   views : 1785


தூத்துக்குடியில் உயரதிகாரி பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி ஒன்றிய அலுவலக பெண் பணியாளர் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரிய நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி ராமலட்சுமி (37). இவர், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக கணினி ஆபரேட்டராக பணி செய்து வருகிறார்.



இந்நிலையில் இன்று பிற்பகல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராமலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் வாகனத்திற்கு அருகே திடீரென டீசலை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து ராமலட்சுமியின் மீது தண்ணீர் ஊற்றி அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.





Also read...  ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

இதுகுறித்து ராமலட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக தற்காலிக பணி செய்து வருகிறேன். நான், பணியில் சேர்ந்த நாள் முதலே வட்டார வளர்ச்சி அலுவலரின் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் என்னிடம் தகராறு செய்து வந்தார். என்னை வேலையை நீக்குவதற்கு பல்வேறு சதிகளை செய்து எனக்கு தொந்தரவு கொடுத்தார். மேலும் உயரதிகாரிகள் மூலம் எனக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கி இரவு 9 மணி வரை வேலை வாங்கினார். இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தான் என்பவரும் உடந்தையாக செயல்பட்டார்.



மேலும் அரசின் நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அவர்கள் முறைகேடாக எனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி என்னை மிரட்டி எனது ஏ.டி.எம். கார்டு மூலமாக அந்த பணத்தை எடுத்து செலவு செய்து வந்தனர். தற்பொழுது என்னை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற உள் நோக்கத்திற்காக, நான் அரசு பணத்தை மோசடி செய்தது போல என் மீது வீண்பழி போடுகின்றனர். இதை எதிர்த்து கேட்டதற்கு, நிலைமையை சரிசெய்ய என்னை மிரட்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராஹிம் சுல்தானும், அவரின் ஓட்டுநர் கனகராஜூம் உல்லாசத்திற்கு வரவேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர்.




இதற்கு நான் உடன்பட மறுத்ததால் என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் பணியில் இருந்து நீக்கிவிட்டனர். இரண்டு குழந்தைகளை வைத்து பிழைப்பு நடத்தி வரும் எனக்கு இந்த வேலையை தவிர வேறெதுவும் தெரியாது. என்மீது விழுந்துள்ள பழியை நீக்குவதற்கும் வழிதெரியாமல் தான் இன்று தீக்குளிக்க முயன்றேன். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.




எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்.




பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்

2024-05-17 12:49:50 - 1 day ago

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையைத் தொடர்ந்து பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த நிலையில் பழைய குற்றால அருவியில் குடும்பத்தினருடன் குளித்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவன், வெள்ளத்தில் அடித்துச்


ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு!

2024-05-17 08:40:17 - 1 day ago

ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிக்க காங்கிரஸ் தயார் : பிரதமர் மோடி பேச்சு! காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள் : பிரதமர் மோடி பேச்சு! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளன. எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமா நடந்து வருகின்றன. அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில்


கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

2024-05-16 10:37:27 - 2 days ago

கனமழை எச்சரிக்கை போர்க்கால நடவடிக்கைக வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் அ..ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை


வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

2024-05-15 16:33:30 - 2 days ago

வள்ளியூர் ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில்


அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது!

2024-05-15 15:43:03 - 2 days ago

அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டது! அமலான சிஏஏ சட்டம்.. 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் : மத்திய பாஜக அரசு மும்முரம்! இந்தியாவில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இம்மசோதா பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த மார்ச் 11ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பாகிஸ்தான்,


நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

2024-05-15 13:13:04 - 2 days ago

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?! திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய


கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!!

2024-05-15 13:03:19 - 3 days ago

கமல் பார்ட்டிகளில் கொகைன் எப்படி..? போலீசார் விசாரணை..!! கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமுதம் யூ- டியூப் நேர்காணல் ஒன்றில் பாடகி சுசித்ரா என்பவர்,


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை

2024-05-15 06:21:11 - 3 days ago

குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர்