POLLING FLAMES 📊 TN ELECTION 2026
வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.
தூத்துக்குடி,
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியைச் சேர்ந்த குமரேசன் மகன் கணேசன் (32) மற்றும் பாளையங்கோட்டை செஞ்சி காலணி பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் ஐஸ்வர்யா (27) ஆகியோர் மதுரைக்கு சென்று திரும்பி காரில் திருநெல்வேலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரிசெல்வம் (29) ஓட்டி வந்தார்.
மதுரை–திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தார் அருகே வந்தபோது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மாரிசெல்வம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படுகாயமடைந்த கணேசன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கயத்தார் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கூட கிடைக்காது -...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: