ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு 51வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் செமி ஃபைனல் செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்
இருப்பினும் மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட துவங்கினார். குறிப்பாக தரமான பவுலராக அறியப்படும் மிட்சேல் ஸ்டார்க் வீசிய 4வது ஓவரில் 6, 6, 4, 6, 6, 0, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் மொத்தம் 28 ரன்கள் விளாசி தெறிக்க விட்டார். அதனால் ஸ்டார்க்கிற்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாஸ் சாதனையும் ரோகித் படைத்தார்.
அவருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் 15 (14) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த சூரியகுமார் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய நிலையில் எதிர்புறம் தொடர்ந்து 224.39 ஸ்ட்ரைக் ரேட்டில் பந்தாடிய ரோகித் சர்மா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் 92 (41) ரன்களில் சுயநலமின்றி அவுட்டானார்.
இந்த 8 சிக்ஸர்களையும் சேர்த்து அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர் கடந்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் ரோகித் சர்மா படைத்தார். அது போக டி20 உலகக் கோப்பையில் சுரேஷ் ரெய்னாவுக்கு (101) பின் அதிகபட்ச ஸ்கோர் (92) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அது மட்டுமின்றி டி20 உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய கேப்டன் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சூரியகுமார் யாதவ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 31 (16) ரன்களும் சிவம் துபே 28 (22) ரன்களும் எடுத்தனர். இறுதியில் ஹரிதிக் பாண்டியா 27* (17) ரவீந்திர ஜடேஜா 9* (5) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்திய கிரிக்கெட் அணி 205/5 ரன்கள் எடுத்தது. அதனால் டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா சமன் செய்தது.
இதற்கு முன் 2012 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியும் 205/4 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதைத்தொடர்ந்து 206 ரன்களை 15.3 ஓவரில் எடுத்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!