INDIAN 7

Tamil News & polling

உடையும் விடுதலை சிறுத்தை.? திமுகவோடு கை கோர்க்கும் பாமக.!

By E7 Tamil 25 நவம்பர் 2024 03:46 AM
Nature

அரசியல் கட்சியும் தேர்தலும்

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் இடம்மாறி வருகிறது. தொகுத்திக்கு ஏற்ப கூட்டணிகளை அமைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதுலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தது. 


 


அப்போது நூழிலையில் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை உருவானது. இதனையடுத்து அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இந்த கூட்டணிக்கு கை மேல் வெற்றி கிட்டியது. நாடாளுமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என தொடர் வெற்றியாக அமைந்துள்ளது. எனவே இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக உருவாகியுள்ளது. இந்ந நிலையில் தான் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இப்போதே கூட்டணி கணக்கை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது.


அந்த வகையில் விடுதலை சிறுத்தைகளின் கட்சியில் இருந்து ஆட்சியில் பங்கு என்ற குரல் எழுந்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா  கூட்டணி ஆட்சி தொடர்பாக அடிக்கடி பேசி வருகிறார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், திருமாவளவன் ஆதவ் அர்ஜூனா பேச்சை பின்பக்கத்தில் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே விடுதலை சிறுத்தைகள் இரண்டாக பிரிந்து விடும் என கூறப்பட்டு வருகிறது.


இந்த நிலை இதே கருத்தை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆட்சியில் பங்கு என்பது தேர்தலுக்கு பிறகு உள்ள சூழ்நிலையை பொறுத்து தானாக அமையும், இப்போது அதைப்பற்றி பேசுவது எல்லாம் பத்திரிக்கையின் கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காக, எப்போதும்  தலைப்பு செய்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கும் நிகழ்வுகள், 


விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜூனா குரல் தான் அதை துவக்கி உள்ளது. ஆதவ் அர்ஜூனா தனித்தன்மை வாய்ந்தவர், திறமையானவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, அவர் தற்போது விசிகவில் ஊடுருவி கொண்டு உள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியை இன்று இரண்டாக உடைத்து விடுவாரோ சந்தேகம் உள்ளது. எனவே விடுதுறை சிறுத்தை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


 


இதே போல கடந்த தேர்தல்களில் அதிமுக- பாஜக என மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் பாமக 2026ஆம் ஆண்டு எந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒரே மேடையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விழுப்புரத்தில் வருகிற நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறக்கப்படவுள்ளது. 


 


இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணிமண்டபம் மற்றும் நினைவு அரங்கத்தை திறந்து வைக்கவுள்ளார்.  மேலும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும், விழா அழைப்பிதழில் ராமதாஸ் மற்றும் அன்புமணி பெயர் அச்சிடப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என விடுதலை சிறுத்தைகள் முரண்டு பிடித்து வரும் திமுகவின் புதிய கணக்கு பழிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலை தள பதிவில் கூறியிருப்பதாவது:- எஸ்.ஐ.ஆர்.வேண்டாம் என்கிற கோரிக்கையை முன்வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 24-ந் தேதி காலை



Whatsaap Channel


சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு


கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்


நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை

நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு


ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு


விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்