Tamil News & polling
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்தாண்டின் வட கிழக்கு பருவமழையின் முதல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுபெறக்கூடும். இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினத்தில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், நாளை நாகை மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


டி.டி.வி.தினகரன் பிறந்த நாளையொட்டி கோவில்பட்டியில் டிசம்பர் 14-ம் தேதி மாரத்தான்
56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த
கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை
ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக சென்னை அண்ணாமலை தமிழக வெற்றிக் கழகம் கனமழை Chennai Annamalai திருமாவளவன் MK Stalin ADMK பாஜக Tamil Nadu Thirumavalavan தவெக மாநாடு சீமான் AIADMK எடப்பாடி பழனிசாமி BJP முக ஸ்டாலின் இந்திய அணி TTV Dhinakaran வடகிழக்கு பருவமழை தமிழக வெற்றிக்கழகம் indian cricket team AMMK TVK Conference வானிலை ஆய்வு மையம் செங்கோட்டையன் Tamilaga Vettri Kazhagam Seeman தமிழ்நாடு Northeast Monsoon தீபாவளி மு.க.ஸ்டாலின் Sengottaiyan PMK Rain அன்புமணி ராமதாஸ் மழை Anbumani Ramadoss காங்கிரஸ் பிரதமர் மோடி தவெக விஜய் VCK நயினார் நாகேந்திரன் பாமக தென்காசி Thoothukudi Congress உதயநிதி ஸ்டாலின் TVK Vijay Tirunelveli தமிழகம் வானிலை திருச்செந்தூர் விடுமுறை பாலியல் தொல்லை GetOut Stalin IMD அமரன் விசிக Edappadi Palaniswami நடிகை கஸ்தூரி மதுரை டிடிவி தினகரன் கைது GetOut Modi rain தனுஷ் Ind vs Nz Ajith திமுக அரசு Washington Sundar கோலிவுட் வாஷிங்டன் சுந்தர் தூத்துக்குடி Heavy Rain சட்டசபை தேர்தல் M.K. Stalin திருநெல்வேலி இந்தியா Nainar Nagendran