உடுமலை:
தமிழகத்தில் மொத்தமாக 4.42 லட்சம் எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள தென்னை சாகுபடியில் நோய்த்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வாக தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டியும், கள்ளை உணவு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் தமிழ்நாடு கள் இயக்கம், இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளை நேரடியாக சந்தித்து திண்ணைக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறியதாவது:-
தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தி 2009-ல் இருந்து போராடி வருகிறோம். ஆனால் அரசு கண்டு கொள்ளாததால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எவ்வித தீங்கும் இல்லாத கள் விற்பனையால் டாஸ்மாக் வருவாய் பாதிக்கும் என்பதால் அரசு மவுனம் சாதித்து வருகிறது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட உள்ளது.
கோவை, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், போராட்டத்துக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம். இதே நிலை நீடித்தால் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யவும் திட்ட மிட்டுள்ளோம் என்றனர்.
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை அனோரா வென்றது. இதே போல சிறந்த நடிகர் யார்? நடிகை யார், இயக்குனர் யார்? யார் யாருக்கு என்னென்ன பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன என விரிவாக பார்க்கலாம். சினிமா துறையில் உலகளவில் ஆஸ்கர் விருதுகள் முதன்மையானதாக கருதப்டுகிறது.
தமிழ்நாடு அரசு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத் தொகை கொடுக்கும் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்குமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு பெண் சிசுக் கொலைகளை தடுக்கும் வகையில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு 25 ஆயிரம் ரூபாய் என
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்தது. அதன்பின், சீமான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியது வேண்டாத வேலை. வீட்டில் ஒட்டிய
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின் வேலையாக உள்ளது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மெகந்தி சர்க்கஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். விஐபிகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் வீட்டில் விசேஷம் என்றால் மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனத்திற்கு தான்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (வயது 58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர், அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவையில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் சேர்ந்து 17 வயது சிறுமியை விடுதி அறைக்கு வரவழைத்து, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் என்று வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் பெருகி வருவதும், அதைத் தடுக்க காவல்துறை
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!